தினகரன் 21.01.2010
பஸ் நிலையத்தில் 60?கடைகளுக்கு சீல்
மதுரை: மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 60 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல்வைத்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 193 கடைகள் உள்ளன. இதற்கு மாநகராட்சி மாத வாடகை வசூலித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஏராளமான கடைகள் வாடகை செலுத்தாமல் ரூ. ஒரு கோடி பாக்கி உள்ளது. தற்போது மாநகராட்சியில் நிதி நெருக்கடி நிலவுவதால், வாடகை பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆணையாளர் செபாஸ்டின் ஆலோசனைப்படி உதவி ஆணையாளர் (வருவாய்) பாஸ்கரன் நோட்டீஸ் அனுப்பினார். இதன் பிறகு ரூ. 40 ஆயிரத்துக்கு மேல் பாக்கியுள்ள 60 கடைகளை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். வாடகை செலுத்திய பிறகு கடை ஒப்படைக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.