தினமலர் 27.01.2010
நகராட்சி பகுதிகளுக்கு இணையாக ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுகிறது
விழுப்புரம் : நகராட்சி பகுதிகளுக்கு இணையாக ஊராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என கலெக்டர் பழனிசாமி பேசினார். கோலியனூர் ஒன்றியம், சோழகனூர் ஊராட் சியில் கிராம சபா கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் கலெக்டர் பழனிசாமி கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, பேசியதாவது: கிராம சபா கூட்டங்கள் கிராம வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. ஒவ் வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக விளங்க வேண்டும் என்பதற்காக அரசு மூலம் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து நூலகம், சாலை, மின் விளக்கு, சுடுகாடு செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 1ம் தேதி முதல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத் தில் 80 ரூபாயாக வழங்கப்பட்ட கூலித் தொகை 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள் ளது. நகர்ப் புறங்களுக்கு இணையாக கிராமப் புறங் கள் அனைத்து வசதிகளையும் பெற்று உயர்கிறது என்றார்.
ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஜோசப் சவுந்தரராஜன், துணை கலெக்டர் சுப்பு லட்சுமி, தாசில்தார் மனோகர் பி.டி.ஓ.,க்கள் துரைக்கண்ணு, ஏகாம் பரம், பஞ்., தலைவர் பாண் டுரங்கன் பங்கேற்றனர்.