தினமலர் 10.02.2010
நகர் நல அலுவலராக கால்நடை டாக்டர்! மாநகராட்சியில் வினோதம்
இதனால், மாநகராட்சி விலங்கியல் பூங்கா இயக்குனர் பெருமாள்சாமியிடம், நகர் நல அலுவலர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கமிஷனர் அன்சுல் மிஸ்ராவின் உத்தரவுப்படி, பெருமாள்சாமி, நகர்நல அலுவலர் பணியை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர், கால்நடை மருத்துவ படிப்பு முடித்தவர். மாநகராட்சி மருத்துவமனைக்கு அன்றாடம் அனுப்பப்படும் மருந்துகளுக்கான அனுமதி வழங்கும் அதிகாரம் இவரிடம் உள்ளது. அதே போன்று, தடுப்பூசி முகாம் நடத்துவது மற்றும் குடிசை பகுதிகளுக்கு சென்று ஏழை, எளிய மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்குதல் போன்ற பணிகளுக்கான உத்தரவு பிறப்பிப்பதும் இவரது பணியாக உள்ளது. கால்நடை மருத்துவம் படித்த இவரிடம், நகர் நல அதிகாரி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதை சிலர் விமர்சிக்கின்றனர். காரணம், மாநகராட்சி நகர் நல அலுவலராக இருப்பவர் எம்.பி.பி.எஸ்., முடித்தவராக இருக்க வேண்டும், என்கின்றனர். மாநகராட்சி வரலாற்றில் கால்நடை டாக்டரை, நகர் நல அலுவலரின் பொறுப்பை கவனிக்குமாறு நிர்வாகம் பணித்திருப்பது, பல்வேறு தரப்பினரின் விமர்சனதுக்கு உள்ளாகியிருக்கிறது.