Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூர் பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணி

Print PDF

தினமணி 26.02.2010

கடையநல்லூர் பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணி

கடையநல்லூர், பிப். 25: கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் உள்ள கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுத்தம் செய்யும் பணிகளை நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

கடையநல்லூர் பகுதியில் பரவிய ஒரு வித காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பாப்பான் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை சீரமைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பாப்பான் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம் பார்வையிட்டார். அவருடன் நகர்மன்ற உறுப்பினர் ராமநாதன், சுகாதார ஆய்வாளர்கள் கைலாச சுந்தரம், பிச்சையா பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்

Last Updated on Friday, 26 February 2010 09:28