தினமலர் 10.03.2010
மாநகராட்சிக்கு வியாபாரிகள் நன்றி
கோவை : சுங்கவரி குறைப்புக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது.அந்த அமைப்பின் அறிக்கை:வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கும் வகையில், தடாகம் ரோடு வாழைக்காய் மண்டி, மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா தினசரி மார்க்கெட் ஆகியவற்றின் சுங்கவரியை மாநகராட்சி சமீபத்தில் உயர்த்தியது. இவ்வரியை குறைக்க வியாபாரிகள் சம்மேளனம் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், சுங்கவரியை குறைத்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதற்காக, மாநகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.