தினமணி 18.03.2010
மழைநீர் சேகரிப்பு மேளா
பெங்களூர், மார்ச் 17: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பெங்களூரில் மார்ச் 20-ம் தேதி, மழைநீர் சேகரிப்பு மேளாவை பெங்களூர் குடிநீர் வாரியமும், ஆர்கயம் அறக்கட்டளையும் இணைந்து நடத்துகின்றன.
இது குறித்து பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய முதன்மைப் பொறியாளர் கெம்பராமையா நிருபர்களிடம் புதன்கிழமை கூறியது:
மார்ச் 20-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தண்ணீர் சிக்கனம் மற்றும் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கப்பன் பூங்காவில் மழைநீர் சேகரிப்பு மேளா நடத்தப்படுகிறது. குடிநீர் வாரியம், ஆர்கயம் அமைப்பு, பெங்களூர் ஜலமண்டலி அபியந்தரா சங்கம் மற்றும் கர்நாடக அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் ஆகியவை இணைந்து விழாவை நடத்துகின்றன.