Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோயம்பேடு வணிக வளாகத்தில் 6 கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி 19.03.2010

கோயம்பேடு வணிக வளாகத்தில் 6 கடைகளுக்கு சீல்

சென்னை, மார்ச் 18: சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய 6 கடைகளுக்கு, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

தொடர் புகார்களைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்டு வந்த 2 பிரியாணி கடைகள், 2 துரித உணவகங்கள், ஒரு தேனீர் கடை மற்றும் ஒரு சிப்ஸ் கடை ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர்.

அந்தக் கடைகளிலிருந்து 450 கிலோ தரமற்ற உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

Last Updated on Friday, 19 March 2010 10:01