தினமணி 19.03.2010
கோயம்பேடு வணிக வளாகத்தில் 6 கடைகளுக்கு சீல்
சென்னை, மார்ச் 18: சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய 6 கடைகளுக்கு, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.
தொடர் புகார்களைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்டு வந்த 2 பிரியாணி கடைகள், 2 துரித உணவகங்கள், ஒரு தேனீர் கடை மற்றும் ஒரு சிப்ஸ் கடை ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர்.
அந்தக் கடைகளிலிருந்து 450 கிலோ தரமற்ற உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.