தினமணி 23.03.2010
வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை
அரக்கோணம், மார்ச் 22: அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி செலுத்தாதோர் மீது ஜப்தி உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அரக்கோணம் நகரில் பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு நடத்திய பின்னர் இதை தெரிவித்தார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் விமலா உடன் இருந்தார்.