தினமலர் 24.03.2010
குடிநீர் சிக்கனம் : நகராட்சி அறிவுரை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவபிரகாசம் அறிக்கை: அருப்புக் கோட்டைக்கு வரும் வைகை மற்றும் தாமிரபரணி குடிநீர் அளவு குறைந்துள்ளது. தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இனிமேல் ஆறு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். பம்ப்செட் வைத்து குடிநீரை உறிஞ்சி அதை விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பம்ப்செட் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.