தினமலர் 25.03.2010
இறைச்சி கடைகளை 28ம் தேதி மூட உத்தரவு
சென்னை:மகாவீர் ஜெயந்தியையொட்டி, வரும் 28ம் தேதி நகரில் இறைச்சிக் கடைகளை மூட, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.மகாவீர் ஜெயந்தியையொட்டி, வரும் 28ம் தேதி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள் மூடப்படும். மேலும், ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சி விற்பவர்கள், அவர்களது கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.