Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமலர் 25.03.2010

மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

அனகாபுத்தூர்:அனகாபுத்தூர் நகராட்சியில் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.அனகாபுத்தூர் நகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 4.87 கோடி ரூபாய் மதிப்பில் 189 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், 58 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக் கப்பட்டு உள்ளது.

இத்திட்டப் பணிகள் உட்பட தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் நகர்புற வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆராய திட்ட இயக்குனர் விவேக் நாங்கியா மற்றும் அதிகாரிகள் நேற்று பல்வேறு இடங்களில் பார்வையிட்டனர்.அனகாபுத்தூர் எம்.ஜி.ஆர்., நகரில் கட்டப்பட்டு வரும் புதிய வீடுகளை பார்வையிட்ட அதிகாரிகள், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டனர். தொடர்ந்து பம்மல், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அதிகாரிகள் சென்றனர்.

Last Updated on Thursday, 25 March 2010 07:56