தினமலர் 25.03.2010
இறைச்சி கடைகளுக்கு விடுமுறை
கோவை: கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிக்கை:மகாவீர் ஜெயந்தி மார்ச் 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, ஆடு, மாடு, கோழி வதை செய்வதையும், இறைச்சி விற் பனை செய்வதையும் அரசு தடை செய்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில், ஆடு, மாடு, கோழி,மீன், பன்றி போன்ற இறைச்சி கடைகளை மூட வேண்டும்.மாநகராட்சி நடத்தும், சிங்காநல்லூர், உக்கடம், சத்திரோடு அறுவை வதை மனைகள் செயல்படாது. விதி முறைகளை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.