தினமலர் 25.03.2010
வரி செலுத்த அறிவுறுத்தல்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை நாளைக்குள் (26ம் தேதி) செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ) திருமலைவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை போன்றவற்றை நாளைக்குள் செலுத்தவேண்டும். இல்லாவிடில் சொத்துக்களை ஜப்தி செய்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.