Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுரங்கப்பாதை பணி: கமிஷனர் ஆய்வு

Print PDF

தினமலர் 27.03.2010

சுரங்கப்பாதை பணி: கமிஷனர் ஆய்வு

மதுரை : மதுரை டி.வி.எஸ். நகர் ரயில்வே கேட்டில், சுரங்கப் பாதை அமைக்கும் பணிக்காக ஏப்.1 முதல் அப்பாதை மூடப்படுகிறது.இதனால் வாகனங்கள் சென்று வர, மாநகராட்சி சார்பில் ஆண்டாள்புரம் பாலத்தின் இருபுறமும் உள்ள சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பாலத்தின் வலதுபுறம் வழியாகவும், டி.வி.எஸ். நகரில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரோட்டை நேற்று, மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் ஆய்வு செய்தனர். தலைமை பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் பாஸ்கரன் உடனிருந்தனர்.

Last Updated on Saturday, 27 March 2010 06:25