Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெரு நாய்களுக்கு கருத்தடை

Print PDF

தினமணி 27.03.2010

தெரு நாய்களுக்கு கருத்தடை

உடுமலை,மார்ச் 26: உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் முக்கியமான சாலைகளில் சுற்றித் திரிந்த நாய்களைப் பிடிக்கும் பணி இரண்டு நாட்கள் நடைபெற்றன. 79 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நகர்நல அலுவலர் பகத்சிங், சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன், லோகநாதன், காமராஜ் மற்றும் ஊழியர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

Last Updated on Saturday, 27 March 2010 07:38