தினமலர் 31.03.2010
பெரம்பலூருக்கு நவீன குப்பை அள்ளும் இயந்திரம்
பெரம்பலூர்:பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றுவதற்காக ரூ. 16 லட்சம் மதிப்பிலான நவீன குப்பை அள்ளும் இயந்திரம், ரூ. 8 லட்சம் மதிப்பில் 15 குப்பை சேகரிக்கும் பாக்ஸ்சுகள், மற்றும் ரூ. 18 லட்சம் மதிப்பில் கழிவு நீர் அகற்றும் இயந்திரம் ஆகியவை வாங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் முதல் கட்டமாக 15 வார்டுகளில் குப்பை அள்ளும் பாக்ஸ் கள் வைக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்படும். துப்புரவு பணியாளர்களுக்கு இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கமளிக்கப்பட்டது.நிகழ்ச்சியின்போது நகராட்சி தலைவர் ராஜா, பொறியாளர் மணிமாறன், கவுன் சிலர்கள் ஜெய்குமார், கண்ணகி மற்றும் சுகதார ஆய்வாளர்கள் வெங்கடாஜலம், முருகன், துப்புரவு பணி மேற் பார்வையாளர் பன்னீர் ஆகியோர் இருந்தனர்.