Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'ஸ்பாட்'டில் ரசீது: மாநகராட்சி ஆலோசனை

Print PDF

தினமலர் 06.04.2010

'ஸ்பாட்'டில் ரசீது: மாநகராட்சி ஆலோசனை

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஆய்வாளர் கள், ரெய்டின் போது வசூ லிக்கும் அபராதத் தொகைக்கு, அதே இடத் தில் ரசீது வழங்குவது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு பகுதியில் ஆய்வு நடத்திய சுகாதார ஆய் வாளர்கள், அபராத தொகை யாக நிர்ணயித்துள்ள தொகையை விட, அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து நேற்று வெளி யான 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத் திலேயே அபராத தொகைக் கான ரசீது வழங்குவது குறித்து மாநகராட்சி நிர் வா கம் ஆலோசித்து வருகிறது. மாநகராட்சி நகர் நல அலுவலர் ஜவஹர்லால் கூறியதாவது: அபராதம் வசூலிக்கும் போது முறைகேடு நடக்கா மல் தடுக்க ஆலோசித்து வருகிறோம். கமிஷனர் ஜெயலட்சுமி, சென்னை யில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்குச் சென்றுள் ளார். அவருடன் ஆலோ சித்து, அபராதம் வசூலிக் கும் இடத்திலேயே ரசீது வழங்க தேவையான நட வடிக்கை எடுக்கப்படும். மேயர், கமிஷனர் பரிந் துரைப்படி, நடைமுறை சிக்கல் எதுவும் இன்றி, ரசீது வழங்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Last Updated on Tuesday, 06 April 2010 06:07