தினமலர் 12.04.2010
முறையற்ற குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு : திண்டிவனம் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
திண்டிவனம் : திண்டிவனம் நகரில் நகராட்சி அனுமதியின்றி போடப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்பு துண் டிக்கப்படும் என கமிஷனர் முருகேசன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தற்போது கோடை காலம் துவங்கி உள்ளது. நகரின் குடிநீர் ஆதாரங்க ளான ரெட்டணை, கண்டரக் கோட்டை திட்டங்களில் பெறப்படும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வரும் மே, ஜூன் மாதங்களில் தண்ணீரின் அளவு மேலும் குறையும். இதனால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்படும். திண்டிவனம் நகரில் அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் பெற்றவர்கள், சட்டத்திற்கு புறம் பாக குடிநீர் எடுப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே அனுமதியின்றி குடிநீர் இணைப்பு போட் டவர்கள் இணைப்பை வரைமுறை படுத்திக் கொள்ள வேண்டும். இல் லையேல் குடிநீர் இணைப்பு துண்டித்து குற்ற நடவடிக்கை எடுக் கப்படும். சட்டத்திற்கு புறம்பாக மின் மோட்டாரில் குடிநீர் எடுப்பவர்கள், தங்கள் மோட்டார்களை அப்புறப்படுத்த வேண்டும். இல் லையேல் நகராட்சியால் அமைக்கும் குழுக் களால் மோட்டார்கள் பறிமுதல் செய்து குடிநீர் இணைப்பு துண்டிக் கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.