தினமலர் 19.04.2010
வீடுகளில் குடிநீர் திருட்டு : மோட்டார்கள் பறிமுதல்
போடி : போடியில் உள்ள வீடுகளில் குடிநீர் திருட்டுக்கு பயன்படுத்திய 16 மின் மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நகராட்சி பகுதியில் உள்ள வீடு மற்றும் ஓட்டல் களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடி பயன்படுத்தி வருவதால் குடிநீர் சீராக சப்ளை செய்ய முடியாத நிலையில் நகராட்சி நிர்வாகம் உள்ளது. இதையடுத்து புதுக்காலனி, பி.எச்.,ரோடு, காமராஜர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் பல வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடியது தெரிய வந்தது. குடிநீர் திருட்டுக்கு பயன்படுத்திய 16 மின்மோட்டார்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் கூறுகையில், பொதுமக்கள் கொடுத்த புகாரில் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் குடிநீர் திருட்டுக்கு பயன்படுத்திய 16 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடுத்த கட்டமாக அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெறும் என்றார்.