தினமலர் 21.04.2010
குடிநீர் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை
திருப்பூர்: குடிநீர் மற்றும் சொத்துவரி செலுத்தாத வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து, திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் மற்றும் சொத்து வரி வசூலிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்தாண்டு 100 சதவீத வரி வசூல் செய்ய இயலவில்லை. இதனால், வரி செலுத்தாதவர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. குமரன் ரோடு பகுதியில் மாநகராட்சி உதவி வருவாய் ஆணையர் தங்கவேல்ராஜ் தலைமையில் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 8,000 ரூபாய் வரிபாக்கி வைத்திருந்த ஒரு வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து நட வடிக்கை எடுக்கப்பட்டது. அதிகம் வரி பாக்கி வைத்திருப்போர் மீது, ஜப்தி நடவடிக்கை பாயும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.