தினமணி 26.04.2010
நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம், ஏப். 25: விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
÷நகராட்சி அலுவலகத்துக்கு வந்த ஆட்சியரை நகர்மன்றத் தலைவர் ஆர். ஜனகராஜ், ஆணையர் சிவக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
÷பின்னர் நகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிலுவையில் உள்ள பணிகள், ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படாமல் உள்ள பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
÷மேலும் நகராட்சி செய்ய வேண்டிய பணியை செய்யமுடியாமல் இருப்பதற்கான காரணங்களை கேட்டறிந்தார்.
புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்துதல், பழைய பஸ்நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.