Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆட்டிறைச்சி விற்பனை : ஆணையர் எச்சரிக்கை

Print PDF

தினமணி 27.04.2010

ஆட்டிறைச்சி விற்பனை : ஆணையர் எச்சரிக்கை

கோவில்பட்டி, ஏப்.26: ஆடுகளை தெருக்களில் வதம் செய்யக் கூடாது என, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் விஜயராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவில்பட்டி நகராட்சி ஊருணி தெருவில் நவீன ஆடு வதைசெய்யும் கூடம் நகராட்சியால் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. நகராட்சிப் பகுதியில் ஆட்டிறைச்சி விற்பனை செய்பவர்கள் அனைவரும் ஆடுகளை நகராட்சி ஆடுவதை செய்யும் இடத்திற்கு கொண்டுசென்று வதை செய்து, நகராட்சி சீல் வைத்த பின்னர்தான் விற்பனை செய்ய வேண்டும்.

தெருக்களில் ஆடுகளை வதை செய்வதும், நகராட்சி சீல் வைக்கப்படாத ஆட்டிறைச்சி விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால், ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்வதுடன், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்.