தினமணி 27.04.2010.
மாநகராட்சி பகுதியில் இறைச்சி விற்கத் தடை
மதுரை, ஏப். 26: புத்த பூர்ணிமா விழா அனுசரிக்கப்பட உள்ளதால் வருகிற 28}ம் தேதி மாநகராட்சிப் பகுதியில் இறைச்சிகள் விற்பனைக்குத் தடை விதித்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சிப் பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி வதைச் செய்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் வதை செய்யும் இடங்களுக்கு மாநகராட்சி விடுமுறை அறிவித்துள்ளது. எனவே அன்றைய தினம் ஆடு, மாடு வதை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.