தினமணி 28.04.2010
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
கூடலூர், ஏப்.27: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட 12 கட்டடங்களுக்கு நகராட்சி அலுவலர்கள் குடிநீர் இணைப்புகளை திங்கள்கிழமை துண்டித்தனர்.உயர் நீதிமன்ற உத்தரவின்படி, குடிநீர் இணைப்புகளை நகராட்சி பொறியாளர் பாஸ்கர் தலைமையில் மேற்பார்வையாளர் சுரேஷ் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் துண்டித்தனர்.