Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு பணி தனியார் மயம்: கம்பம் நகராட்சி கைவிட்டது

Print PDF

தினமலர் 30.04.2010

துப்புரவு பணி தனியார் மயம்: கம்பம் நகராட்சி கைவிட்டது

கம்பம்:கம்பம் நகரில் முதல் பத்து வார்டுகளில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவது என்ற நகராட்சியின் முடிவு கைவிடப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒவ் வொரு நாளும் 18 மெ.டன் குப்பைகள் சேகரமாகிறது. நகராட்சியில் மொத்தம் 130 துப்புரவு பணியாளர்கள் பணியிடம் உள்ளது. தற்போது 100 பேர் தான் உள்ளனர். காலியாகவுள்ள இடங்களில் புதிய நியமனங்கள் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் சாக் கடை சுத்தம் செய்தல், குப்பைகள் அள்ளுதல், பராமரிப்பு செய்தல் போன்ற பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வரும் மாதங்களில் துப்புரவு பணியாளர்கள் பலர் ஓய்வு பெறவுள்ளனர். இந்நிலையில் நகரில் துப்புரவு பணிகள் மேற்கொள்வதில் கடும் பாதிப்பு ஏற்படும். முதல் பத்து வார்டுகளில் குப்பைகள் அள்ளுதல் மற்றும் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்க நகராட்சி முடிவு செய்தது. இதற்கென கவுன்சில் கூட் டத்தில் அனுமதியும் பெறப்பட்டது. இந்நிலையில் திடீரென துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குதல் என்ற முடிவை நகராட்சி நிர்வாகம் கை விட்டுள்ளது. இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

Last Updated on Friday, 30 April 2010 06:51