Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டிவனம் நகராட்சியில் டெண்டருக்கு ஒப்புதல்:தினமலர் செய்தியால் விரிவான விவாதம்:ஒரு கோடி ரூபாய் செலவில் அலுவலக கட்டடம்

Print PDF

தினமலர் 30.04.2010

திண்டிவனம் நகராட்சியில் டெண்டருக்கு ஒப்புதல்:தினமலர் செய்தியால் விரிவான விவாதம்:ஒரு கோடி ரூபாய் செலவில் அலுவலக கட்டடம்

திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான டெண் டர் பணிக்கு மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.திண்டிவனம் நகர மன்றக் கூட்டம் சேர்மன் பூபாலன் (தி.மு..,) தலைமையில் நேற்று காலை நடந்தது. ஆணையர் முருகேசன், நகர மன்றத் துணைத் தலைவர் கவிதா முரளிதரன் (தி.மு..) மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.கூட்டம் துவங்கியவுடன், சலவாதி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் ரவிச்சந்திரன்(தி.மு..,) தீர்மானம் கொண்டு வந்தார். இங்கு மேம்பாலம் கட்டுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், சுடுகாட் டிற்கு செல்வதிலும் பிரச்னை ஏற் படும் என்று சேர்மன் பூபாலன் கூறினார். இதையடுத்து இந்த தீர் மானம் ஏகமனதாக நிறைவேறியது.பின்னர் நடந்த விவாதம் வருமாறு:சேர்மன்: கவுன்சிலர்கள் தங்கள் இடத்தை விட்டு வெளியில் வந்து பேசக் கூடாது.

ஆணையர்: நகராட்சிக்கு வருவாய் ஆதாரத்திற்காக கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.நகரில் ரோடு வசதி, கால்வாய் வசதி போன்றவற்றை செய்யாமல், வரி வசூல் மட்டும் செய்யப்படுவது குறித்து பா..., கவுன்சிலர்கள் ஜெயராஜ், முரளி தாஸ் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

அப்பாஸ்மந்திரி(.தி.மு..,): சேர்மன் எங்களுக்கு அம்மா போல், நீங்கள் அடிக்கலாம். நாங்கள் கோபப்படலாம், பின்பு எங்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்றார்.

சேர்மன்: நான் அம்மா போல அல்ல, அய்யா போல் என்று கூறுங்கள்.

பூபால்(வி.சி.,): வார்டுகளில் உள்ள குறைகளால் பொதுமக்கள் கவுன்சிலர்கள் மீது வெறுப்படைகின்றனர். அதன் வெளிப்பாடுதான் இங்கு கவுன்சிலர்கள் கோபப்படுகின்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.கூட்டத்தில் நகராட்சி அலுவலகம் கட்ட ஆறு முறை டெண்டர் விட்டப் பின்பு புதுச்சேரி காளிதாஸ் என்பவரின் ஒப்பந்த புள்ளி தகுதி வாய்ந்ததாக ஏற்கப்பட்டது. அவர் மதிப்பீட்டை விட 13.86 சதவீதம் அதிகமாக கொடுத்துள்ளார். இதை குறைத்து 9.70 சதவீதம் அதிகமாக செய்ய ஒப்புதல் கடிதம் பெறப்பட்டுள்ளது.எனவே ஒரு கோடி ரூபாய் செலவில் நகராட்சி அலுவலக கட்டடம் கட்ட மன்றம் ஒப்புதல் அளித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து நான்குமுறை மன்றக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்த நகராட்சி ஆணையர் முருகேசன் நேற்று நடந்த கூட்டத் தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்றக் கூட்டத்தில் தினமலர் பத்திரிகையை காண்பித்து பூபால் (வி.சி.,) பேசியதாவது:நகரில் உள்ள சுகாதார சீர்கேடுகளை தினமலர் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்பட வில்லை. அவர்கள் நூறு ரூபாய் சம்பள உயர்வு கேட்டு 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். அதற்கு முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்.

இதே கருத்தை அ.தி.மு.., கவுன்சிலர் அப்பாஸ் மந்திரியும் வலியுறுத்தினார்.ஆணையர் முருகேசன் பதிலளிக்கையில், திண்டிவனம் நகராட்சிக்கு சிறப்பு அனுமதி வழங்கி மேலும் பணியாளர்களைநியமிக்க அரசை கேட்டுள்ளோம். சுய உதவிக் குழுவினர் டெண்டர் போட்டு தான் 80 ரூபாய்க்கு வேலை செய்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு சம்பளம் உயர்த்தி தரலாம் என்று கூறினார்.மேலும் தினமலர் செய்தியின் காரணமாக சுகாதாரப் பிரச்னை குறித்து விரிவான விவாதம் நடந்தது.

Last Updated on Friday, 30 April 2010 07:37