Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

6 ஆயிரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் வரி கட்டாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன் 22.10.2010

6 ஆயிரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் வரி கட்டாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

ஈரோடு, அக். 22: ஈரோடு மாநகராட்சி சார்பில் நடப்பாண்டில் வரியினங்களை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயர்த்தப்பட்ட தொழில்வரியை கட்ட 6 ஆயிரம் வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு 2010&11ம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், உரிமக்கட்டணங்கள் மற்றும் இதர வரியினங்களை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதுடன் ஜப்தி மற்றும் கோர்ட் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் வரி செலுத்தலாம் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சியின் இந்த அறிவிப்பால் வர்த்தக நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் கட்டணம் உயர்த்த தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு அனைத்து கட்சி கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல சொத்துவரியையும் 500 சதவீதத்திற்கு உயர்த்தி தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கும் கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த தீர்மானமும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் சொத்துவரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொழில்வரியை உயர்த்தியுள்ளதால் வணிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். உயர்த்தப்பட்ட தொழில்வரியை கட்டகோரி 6 ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்வரி உயர்வை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் விஜயபாஸ்கர் கூறுகையில், 1397967985 மாநகராட்சி கூட்டத்தில், தொழில்வரியை 25 முதல் 35 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2008ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது நாங்கள் 25 சதவீதம் மட்டும் உயர்த்தலாம் என்று கூறினோம். 6 மாதத்திற்கு ஒருமுறை 188 ரூபாய் தொழில்வரி இருந்தது. ஆனால் தற்போது இந்த வரியை 938 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். இந்த வரி உயர்வால் சாதாரண டீக்கடை வைத்துள்ளவர்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள். பெரிய ஜவுளிக்கடைகளுக்கும், டீக்கடை, பீடாக்கடைகளுக்கும் ஒரே மாதிரியாக தொழில்வரியை விதித்துள்ளனர். எனது பகுதியில் மட்டும் 3 ஆயிரம் கடைகள் உள்ளன. தொழில்வரி உயர்வை ரத்து செய்து விட்டு பழைய வரியையே வசூல் செய்ய வேண்டும்என்றார். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘தொழில்வரியை ஏதும் நாங்கள் உயர்த்தவில்லை.

வணிகவரித்துறையில் தொழில் நிறுவனங்களின் டின் நம்பரை கொண்டு தான் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 85 சதவீதம் வசூல் செய்துள்ளோம். தற்போது 6,875 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் 6 ஆயிரம் பேருக்கு தொழில்வரி செலுத்தகோரி நோட்டீஸ் கொடுத்துள்ளோம்என்றனர்.

 

அண்ணா நூற்றாண்டு விழா வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி 21.10.2010

அண்ணா நூற்றாண்டு விழா வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம், அக். 20: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் அண்ணா நூற்றாண்டு விழா வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி புதன்கிழமை ஆய்வு செய்தார்.

÷அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழக அரசு காஞ்சிபுரம் நகரின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கியது. இதில் செவிலிமேடு பேரூராட்சியில் ரூ. 25 லட்சம் செலவில் நடைபெறும் பல்லவன் நகர் பூங்கா மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி ஆய்வு செய்தார். கூடுதல் விளையாட்டு பொருள்களையும், பொதுமக்கள் அமருவதற்காக கூடுதலாக பெஞ்சுகள் அமைக்கவும், தண்ணீர் தொட்டிக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கவும் உத்தரவிட்டார்.

÷பல்லவன் நகர்- திருப்பருத்திக்குன்றம் இணைப்புச் சாலையை மேம்படுத்த அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். காந்தி சாலை மேம்பாட்டு பணிகள், கே.எம்.வி.நகர் நகராட்சி பூங்கா, வரதராஜ பெருமாள் கோயில் சன்னதி தெருவில் போடப்பட்ட சிமென்ட் சாலை பணிகள், ரயில்வே சாலையில் போடப்பட்டுள்ள சிமென்ட் சாலைப் பணிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில்

ரூ. 1.32 கோடியில் கட்டப்பட்டு வரும் நீச்சல் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ÷காமாட்சியம்மன் கோயில் சன்னதி வீதி சிமென்ட் சாலைப் பணிகள், ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி வீதி சிமென்ட் சாலை பணிகள், சர்வ தீர்த்தகுளம் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்கக் கூறினார்.

÷இந்த ஆய்வின்போது செவிலிமேடு பேரூராட்சித் தலைவர் எஸ்.எம். ஏழுமலை, பேரூராட்சி உதவி இயக்குநர் (பொ) சந்திரசேகரன், செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத் தலைவர் விசுவநாதன், நகராட்சி ஆணையர் ரா. மோகன், நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ரூ20 கோடியில் பணிகள்: கலெக்டர் ஆய்வு

Print PDF

தினகரன் 21.10.2010

ரூ20 கோடியில் பணிகள்: கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம், அக். 21: மாவட்டத்தில் ரூ20 கோடி செலவில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி நேற்று ஆய்வு செய்தார்.

அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்த ரூ20 கோடி நிதியை முதல்வர் கருணாநிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியின் மூலம், பல்வேறு பகுதிகளில் சாலை, பூங்கா, கால்வாய், விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன. இந்தப் பணிகளை கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

காந்தி சாலை மேம்பாடு, நகராட்சி பூங்கா, வரதராஜ பெருமாள் சந்நிதி தெரு சிமென்ட் தளம், மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ1 கோடியே 32 லட்சத்தில் கட்டப்படும் நீச்சல் குளம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர், காஞ்சிபுரம் அருகேயுள்ள செவிலிமேட்டில் ரூ25 லட்சத்தில் அமைக்கப்படும் பல்லவன் பூங்காவை ஆய்வு செய்தார். பூங்காவில் கூடுதலாக விளையாட்டு பொருட்களையும், மக்கள் அமர்வதற்கு இருக்கைகளும் அமைக்க அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். ரூ60 லட்சம் செலவில் திருப்பருத்திக்குன்றம் கால்வாயை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணி, ரூ2 கோடியே 5 லட்சம் செலவில் கச்சபேஸ்வரர் நகரில் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா, ரூ43 லட்சத்து 9,000 செலவில் காமாட்சி அம்மன் சன்னதி தெரு, ஏகாம்பர நாதர் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் சாலைப் பணி, ரூ1 கோடியே 93 லட்சம் செலவில் ஒக்கப்பிறந்தான் குளத்தை சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.

உதவி இயக்குனர் சந்திரசேகரன், நகராட்சி ஆணையர் மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியம், பொதுப்பணித் துறை அதிகாரி குமரேசன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி லோகநாதன், செவிலிமேடு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத் தலைவர் விஸ்வநாதன், செவிலிமேடு பேரூராட்சி தலைவர் ஏழுமலை உட்பட பலர் உடன் வந்திருந்தனர்.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கட்டப்படும் நீச்சல் குளத்தை கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி நேற்று பார்வையிட்டார்.

Last Updated on Thursday, 21 October 2010 09:18
 


Page 336 of 506