Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வைகுண்ட ஏகாதசி அடிப்படை வசதிகள்: மேயர் ஆய்வு

Print PDF

தினமணி             04.01.2014 

வைகுண்ட ஏகாதசி அடிப்படை வசதிகள்: மேயர் ஆய்வு

சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவுக்கு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மேயர் அ. ஜெயா வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  சிறீரங்கம் பகுதியில் 12 இடங்களில் 39 தாற்காலிக கழிப்பறைகள், 2 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 7 பொது குடிநீர் குழாய்கள் மற்றும் வீட்டு இணைப்புகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

  சிறீரங்கம் சாலைரோடு, திம்மராயசமுத்திரம் ஆகிய இரு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மேயர் அ. ஜெயா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

  மேலும், காந்தி சாலை ஓரத்தில் 5 அடி அகலத்தில் ரூ. 30 லட்சத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, அடையவளைஞ்சான் வீதி பிரசன்னா மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ. 30 லட்சத்தில் கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தையும் மேயர் பார்வையிட்டார்.

  இந்த ஆய்வின்போது, துணை மேயர் மரியம் ஆசிக், கோட்டத் தலைவர் எம். லதா, நகர்நல அலுவலர் டாக்டர்  மாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

நகராட்சிப் பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு

Print PDF

தினமணி             04.01.2014 

நகராட்சிப் பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் தர்ம ராஜா கோவில் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ம.பொ.கணேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவர்களிடையே கணிதப்பாடம் குறித்தும், வாசிப்புத் திறன் குறித்தும், பாடல்கள் பாடுவது குறித்தும் கேள்விகளைக் கேட்டார். மாணவர்கள் அதற்குண்டான பதில்களை அளித்தனர். பின்னர் பள்ளியின் போதிக்கும் திறன் குறித்தும் ஆய்வு செய்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மோகன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை: அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமணி             04.01.2014

பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை: அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமையவுள்ள இடங்களில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்க ரூ. 147 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில், தமிழக அரசு 50 சதவீதம் தொகையான ரூ. 72 கோடியை ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கியுள்ளது. தற்போது நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்படுவதால் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான ரூ. 147 கோடியில் மீதமுள்ள 50 சதவீதம் தொகையை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

திட்டத்துக்கான முழுத் தொகையையும் மானியமாகப் பெற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, நகராட்சிக் கூட்டத்தில் முழு மானியம் பெற அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், பாதாள சாக்கடைத் திட்டம் அமைவதற்கான இடங்களை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜேந்திரன், உதவி மேலாளர்கள் ஜஸ்டீன், கார்த்திகேயன், சுற்றுச் சூழல்-சமூக மேலாளர்கள், சித்ரா, சிவராமன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார், ஆணையாளர் சுந்தராம்பாள், நகராட்சிப் பொறியாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

 


Page 35 of 506