Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வசாய்&விரார் மாநகராட்சி பகுதியில் 22,335 சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து தள்ள அதிகாரிகள் தயக்கம்

Print PDF

தினகரன் 08.10.2010

வசாய்&விரார் மாநகராட்சி பகுதியில் 22,335 சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து தள்ள அதிகாரிகள் தயக்கம்

விரார்,அக்.8: வசாய்&விரார் பகுதியில் இருக்கும் 22,335 சட்டவிரோத கட்டுமானங்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் ஊழல் காரணமாக இடிக்கப்படாமல் இருப்ப தாக கூறப்படுகிறது.

வசாய்&விரார் பகுதியில் 22,335 சட்டவிரோத கட்டிடங்களும், மீராபயந்தர் பகுதியில் 13,916 சட்டவிரோத கட்டிடங்களும் இருக்கின்றன. இக்கட்டிடங்கள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை ஆகும். ஆனால் அவற்றை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசியல் செல்வாக்கு மற்றும் ஊழல் காரணமாக இது வரை 1250 சட்டவிரோத கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது என்று தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத கட்டுமானங்களை வைத்திருப்பவர்கள் அதிக அளவு லஞ்சம் கொடுத்து இடிக்கப்படவேண்டிய சட்டவிரோத கட்டிடங்கள் பட்டியலில் தங்களது பெயரை மிகவும் பின்னுக்கு தள்ளி விடுகின்றனர். அல்லது ஏதாவது கோர்ட்டில் தடை பெற்று விடுகின்றனர்.

இது வரை 2000 தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பி விட்டால் சம்மந்தப்பட்டவர் உடனே ஏதாவது ஒரு அரசியல்வாதியின் துணையோடு அதனை தடுத்து நிறுத்தி விடுவதாக மீராபயந்தர் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் வசாய் தாசில்தாராக இருந்த கே.படானே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டியிருந்த 13,944 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் அவற்றை வரும் டிசம்பர் மாதத்திற்குள் இடிக்கவும் இலக்கு நிர்ணயித்திருந்தார். இந்த நிலையில், அவர் அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தம் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.

அதோடு சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க போதிய போலீஸ் பாதுகாப்பும் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று மீராபயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத கட்டுமானங்களை கட்ட போலீசாரும் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிப் பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் மாநில அரசு இந்த சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் பணி இந்த மாதமே தொடங்கும் என்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.

 

வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க ஆயத்த நிலையில் மாநகராட்சி: ஆணையர் கார்த்திகேயன் பேட்டி

Print PDF

தினமணி 07.10.2010

வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க ஆயத்த நிலையில் மாநகராட்சி: ஆணையர் கார்த்திகேயன் பேட்டி

சென்னை, அக்.6: வட கிழக்கு பருவ மழையைச் சமாளிக்க ஆயத்த நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:

வடகிழக்கு பருவ மழையைச் சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதுவரையில் சுமார் 600 கிலோ மீட்டர் நீள மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் 200 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்யும் பணி முடிவடையும். மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் எவை எனக் கண்டறியப்பட்டு, அங்கு மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்களைக் கொண்டு செல்ல போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் கீழ் உள்ள 12 சுரங்கப் பாதைகளில் மழை நீரை உடனே வெளியேற்ற 12 மின் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மண்டல அலுவலகங்களில் எங்கும் எளிதாக எடுத்துச் செல்லும் வசதியுடன் கூடிய 88 மின் மோட்டார்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

÷இத்துடன் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயார் செய்ய உணவுக் கூடங்களும் தயார் நிலையில் உள்ளன. மழைக்கால நிலைமை மோசமடையும் பட்சத்தில், ஒவ்வொரு மண்டலத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் அவசரகால பணிகள் மேற்கொள்ளப்படும். கழிவுநீர் வடிகால்வாயில் ஓடும் நீரை, மழைநீர் வடிகால்வாயில் திருப்பிவிடும்போது, சென்னை குடிநீர் வாரியத்தின் நீரேற்று நிலையங்களில் அழுத்தம் ஏற்பட்டு, மேலும் சிக்கலுக்கு வழிகோலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மழைநீர் வடிகால்வாயில், கழிவுநீரை திருப்பி விடக்கூடாது என தலைமைச்செயலர் மாலதி அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள் இல்லாமல், 54 மீட்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்றார் ஆணையர் கார்த்திகேயன்.

 

திண்டுக்கல்லில் பன்றிகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நகர்மன்ற தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 07.10.2010

திண்டுக்கல்லில் பன்றிகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நகர்மன்ற தலைவர் தகவல்

திண்டுக்கல், அக். 7: திண்டுக்கல் நகரில் சுற்றித்திரியும் பன்றிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என நகர்மன்ற தலைவர் நடராஜன் தெரிவித்தார்.

திண்டுக்கல் நகரில் கொசுக்களை ஒழிக்க பொது சுகாதாரதுறை சார்பில் ரூ.12லட்சம் மதிப்பில் (புகை தெளிப்பான்) கொசு ஒழிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை நேற்று நகர்மன்ற தலைவர் நடராஜன் இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் லெட்சுமி, நகர்நல அலுவலர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின் செய்தியாளர்களிடம் நகர்மன்ற தலைவர் நடராஜன் கூறுகையில், "புதியதாக வழங்கப்பட்டுள்ள கொசு ஒழிப்பு இயந்திரம் மூலம் தினமும் 4 வார்டுகள் வீதம் 20 நாட்களுக்கு கொசு மருந்து தெளிக்கப்படும். இதற்கு தினமும் 120 லிட்டர் டீசலும், 6 லிட்டம் மருந்தும் வழங்கப்படுகிறது. அதேபோல் நகர் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

கடந்த 5 நாட்களில் நகராட்சி ஊழியர்கள் 50 பன்றிகளுக்கு மேல் பிடித்துள்ளனர். அவைகள் மீண்டும் திண்டுக்கல் நகருக்குள் வராத வகையில் மலை பகுதியில் விடப்பட்டுள்ளது. இந்த பணி தொடந்து நடைபெறும்Ó என்றார்.

 


Page 343 of 506