Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கட்டுமானப்பணி பற்றி தகவல் தராத மாநகராட்சி இன்ஜினியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Print PDF

தினகரன் 07.10.2010

கட்டுமானப்பணி பற்றி தகவல் தராத மாநகராட்சி இன்ஜினியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

புதுடெல்லி, அக். 7: டெல்லி மாநகராட்சி சார்பில் துவாரகா பகுதியில் நடந்து வரும் கட்டுமானப் பணி பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு தீரஜ் சேகல் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். மாநகராட்சியின் பொது தகவல் அதிகாரியும், செயற்பொறியாளருமான (கட்டிடம்) எஸ்.ஆர்.லக்கன், தகவல் தர மறுத்து விட்டார்.

இதனால், லக்கனின் மேலதிகாரியை சந்தித்து தீரஜ் முறையிட்டார். அதன்பிறகும் லக்கன் தகவலைத் தரவில்லை. அதைத் தொடர்ந்து, மாநில தகவல் ஆணையத்தில் தீரஜ் புகார் அளித்தார். தீரஜ் கேட்கும் தகவலைத் தரும்படி மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டும், லக்கன் கேட்கவில்லை.

அதனால் மத்திய தகவல் ஆணையத்தில் தீரஜ் மனுதாக்கல் செய்தார். அதை மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:

துவாரகா பகுதியில் நடந்து வரும் கட்டுமானப் பணி பற்றிய விவரங்களைத் தர திட்டவட்டமாக லக்கன் மறுத்துள்ளார். மேலதிகாரி நினைவுப்படுத்தியும், மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டும் அவர் தகவலைத் தர மறுத்து விட்டார். தகவலைத் தர மறுத்ததற்கான காரணத்தையும் சொல்ல லக்கன் முன்வரவில்லை.

தகவலைத் தர மறுத்ததற்கான காரணத்தை விளக்க அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டபோதும், அவர் எந்த விளக்கத்தையும் அளிக்க முடியாது என்று தீர்மானித்து விட்டார். அதனால், லக்கனுக்கு அபராதம் விதிக்க பொருத்தமான வழக்காக இது உள்ளது என்று ஆணையம் முடிவு செய்கிறது. தகவலைக் கேட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் சரியான விவரங்களை அளிப்பதில் தாமதம் செய்த லக்கனுக்கு, தகவலறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் அதிகபட்ச அபராதத்தொகையான ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு சைலேஷ் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

 

அனுமதி பெறாத கட்டடங்கள் மீது விரைவில் நடவடிக்கை: நகர ஊரமைப்பு இயக்குநர்

Print PDF

தினமணி 06.10.2010

அனுமதி பெறாத கட்டடங்கள் மீது விரைவில் நடவடிக்கை: நகர ஊரமைப்பு இயக்குநர்

கோவை,​​ அக்.​ 5: ​ ​ முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் தெரிவித்தார்.​ ​

கோவை உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை நடந்தது.​ இதில் நகர ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் பங்கேற்று விண்ணப்பதாரர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.​ பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

​ தமிழகத்தில் கட்டடங்கள் கட்டுவதற்கான புதிய விதிமுறைகள் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.​ 9 மாநகராட்சிகள்,​​ திருவள்ளூர்,​​ காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் முழுமையாக நடைமுறையில் உள்ளது.​ இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.​ புதிய விதிகளின்படி குடியிருப்புகள்,​​ நிறுவனங்கள் அமைக்கும் போது கட்டடங்களுக்கு இடையே 9 மீட்டர் இடைவெளி அவசியம்.​ கட்டடத்தின் அளவிற்கு ஏற்ப வாகனம் நிறுத்தும் வசதி கட்டாயம்.​ வாகனங்கள் நிறுத்தும் வசதியை விதிமுறையில் உள்ளவாறு செய்யாத நிறுவனங்கள்,​​ வணிக வளாகங்களுக்கு அனுமதி கிடைக்காது.​ முறையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களில் அனுமதி வழங்க துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​ சென்னையைப் போல கோவையிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைக்க துறை ரீதியிலான பரிந்துரையை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.​ கோவை உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.​ கோவையில் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது.​ அவ்வாறு விதி மீறிய கட்டடங்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

மீறிய கட்டடங்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

 

பழுதடைந்த சாலை,​​ கால்வாயில் கழிவுநீர் கலப்பு:​ ​ உடனடியாக சரி செய்ய மேயர் உத்தரவு

Print PDF

தினமணி 06.10.2010

பழுதடைந்த சாலை,​​ கால்வாயில் கழிவுநீர் கலப்பு:​ ​ உடனடியாக சரி செய்ய மேயர் உத்தரவு

மதுரை,அக்.5: ​ ​ பழுதடைந்த மதுரை பூந்தமல்லி நகர் சாலையையும்,​​ முல்லைநகர் கால்வாயில் ​ கழிவுநீர் கலப்பதையும்,​​ நேரில் பார்வையிட்ட மேயர் கோ.​ தேன்மொழி,​​ அவற்றை ​ உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். ​ மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 1 முதல் 21 வார்டுகள் வரையிலான ​ பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.​ ​

​ இதில் மேயர் தேன்மொழி,​​ துணைமேயர் பி.எம்.மன்னன்,​​ மாநகராட்சி ஆணையர் ​ எஸ்.​ செபாஸ்டின் ஆகியோர் பங்கேற்று மனுக்களை ஆய்வு செய்தனர்.​ ​ ​ இதில்,​​ பெறப்பட்ட 35 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.

​ ​ முன்னதாக,​​ 19-வது வார்டு பூந்தமல்லி நகர் பகுதியில் பழுதடைந்த சாலையைப் பார்வையிட்டு அதனை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ​ மேலும்,​​ 2-வது வார்டு முல்லைநகர் கால்வாயில் ஆனையூர் பகுதியிலிருந்து வருகிற கழிவுநீர் கலப்பதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.​ இதையடுத்து அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்ட மேயர் சரி செய்யுமாறு உத்தரவிட்டார்.

​ 7-வது வார்டில் மாநகராட்சி சுகாதார வளாகத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாமை மேயர் தொடக்கி வைத்தார்.​​ நிகழ்ச்சிகளில் மண்டலத் தலைவர் க.​ இசக்கிமுத்து,​​ மாநகர் மன்ற உறுப்பினர்கள் ​ நல்லகாமன்,​​ நீலமேகம்,​​ சந்திரன்,​​ தலைமைப் பொறியாளர் கே.​ சக்திவேல்,​​ நகர்நல ​ அலுவலர் சுப்பிரமணியன்,​​ கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.​ விஜயகுமார்,நகரமைப்பு ​ அலுவலர் முருகேசன்,​​ உதவி ஆணையர் ​(வடக்கு )​ ராஜகாந்தி,மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் ஆகியோர் உடன் சென்றனர்.

 


Page 344 of 506