Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி அனுமதி கட்டாயம் தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க கட்டுப்பாடு

Print PDF

தினகரன் 04.10.2010

மாநகராட்சி அனுமதி கட்டாயம் தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க கட்டுப்பாடு

தூத்துக்குடி, அக். 4: தூத்துக் குடி நகர்பகுதியில் மாநகராட்சி அனுமதி பெற்ற பிறகே டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும் என ஏஎஸ்பி சோனல்சந்த்ரா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டிஜிட் டல் பேனர்கள் வைத்தல் தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் ஏஎஸ்பி சோனல்சந்த்ரா அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

அவர் தெரிவித்ததா வது:

தூத்துக்குடி நகரில் முக்கிய வீதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களால் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றை ஒழுங்கு செய்யப்பட வேண்டியுள்ளது. விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் உடனடியாக அகற்றப்படும்.

அக்.11 முதல் தூத்துக் குடி நகருக்குட்பட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறவேண்டும். திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்காக டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் அவர்கள் பகுதிக்குட்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். விழாவுக்கு 2 நாள் முன்பும், பின்னர் இருநாட்கள் மட்டுமே அவை இருக்கவேண்டும். கோயில் விழாக் கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும் என்றார்.

இதில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நகர செயலாளர்கள் அதிமுக ஏசாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் ஞானசேகரன், மதிமுக மாடசாமி, சமக அற்புதராஜ், மாணவர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஜெயக்குமார், பாமக மாவட்ட தலைவர் மாரிச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், ஜெயப்பிரகாஷ், சப்&இன்ஸ்பெக்டர்கள் ஆபிரகாம்குரூஸ், தனிஸ்லாஸ்பாண்டி, ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அக். 11 முதல் அமல்

தூத்துக்குடி நகர்பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக ஏஎஸ்பி சோனல்சந்த்ரா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

மழைநீர் வடிகாலில் கழிவு நீர் : ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

Print PDF

தினமலர் 30.09.2010

மழைநீர் வடிகாலில் கழிவு நீர் : ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

மதுரை : மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றிய, வீடுகள், கடைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்து விட்ட இடங்களில், மழைநீர் தேங்கக் கூடாது என்பதற்காக இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. பாதாள சாக்கடை இணைப்பு பெற வேண்டுமானால், மாநகராட்சிக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அந்தந்த கட்டட உரிமையாளர்களே, சொந்த செலவில் பாதாள சாக்கடையில் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் சிலர், இணைப்பு பெற செலவாகும் என நினைத்து, மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விடுகின்றனர். இதனால் மழைநீர் வடிகால் அமைப்பதன் நோக்கமே அடிபட்டுப் போகிறது. இதுபற்றி புகார்கள் கிளம்பியதை அடுத்து, மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கத் துவங்கி உள்ளது

மாநகராட்சி.கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது:பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள், உடனே அதை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் புதூர், கற்பகநகர், பந்தல்குடி, ஷெனாய்நகர், சொக்கிகுளம், செல்லூர், எஸ்.எஸ்.காலனி, மேலபொன்னகரம், காமராஜர் சாலை பகுதிகளில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றுவதாக புகார்கள் வந்துள்ளன. இவர்களுக்கும், சிந்தாமணி வாய்க்கால், கிருதுமால் நதியிலும் கழிவுநீரை வெளியேற்றுவோருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல், வைகை ஆறு மற்றும் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றியவர்களிடம் நேற்று ஒரு நாளில் மட்டும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள், உடனே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

 

பாதாள சாக்கடை நீரை வைகையில் வெளியேற்றியவர்களுக்கு அபராதம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன் 30.09.2010

பாதாள சாக்கடை நீரை வைகையில் வெளியேற்றியவர்களுக்கு அபராதம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

மதுரை, செப். 30: பாதாள சாக்கடை நீரை வைகை ஆற்றுக்குள் வெளியேற்றியவர்களுக்கு ரூ50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த இணைப்பு பெறாமல், பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடையை புதிதாக கட்டிய மழை நீர் வடிகாலிலும், வைகை ஆற்றிலும் வெளியேற்றுகின்றனர்.

இதன் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நடத்திய சோதனையில் கிருதுமால் நதி, சிந்தாமணி கால்வாய், வைகை ஆற்றின் கரை ஓரங்களில் 25 வீடு மற்றும் 2 தொழில் நிறுவனங்கள் சிக்கியது. இவர்களுக்கு ரூ50ஆயிரம் வரை அபராதம் விதித்து மாநகராட்சி வசூலித்துள்ளதாக ஆணையாளர் செபாஸ்டின் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, புதூர், கற்பகநகர், பந்தல்குடி, செனாய்நகர், சொக்கிகுளம், செல்லூர், எஸ்.எஸ்.காலனி, மேலப்பொன்னகரம், காமராஜர்சாலை, பழங்காநத்தம், டி.பி.கே.சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகாலில் பாதாள சாக்கடையை தவறான முறையில் வெளியேற்றுவதாக புகார் வந்துள் ளது. இவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.

 


Page 347 of 506