Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

எஸ்.சி., எஸ்.டி. மேம்பாட்டு நிதி பயன்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

Print PDF

தினகரன் 30.09.2010

எஸ்.சி., எஸ்.டி. மேம்பாட்டு நிதி பயன்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

பெங்களூர், செப். 30: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை சரியாக பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லேஷ் கோரிக்கை வைத்தார்.

மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் எஸ்.கே.நடராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லேஷ் கலந்து கொண்டு பேசுகையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினரின் மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் கோடிகணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் நிதியை பயனாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யும் நிதியை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

இதை மாநகராட்சி அதிகாரிகள் மதிக்காமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு உண்மையான பயனாளிகளுக்கு செலவிடாமல் தவிர்த்து வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநியாயம் செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

குடிநீர் திருட்டு: ஆட்சியர் எச்சரிக்கை

Print PDF

தினமணி 29.09.2010

குடிநீர் திருட்டு: ஆட்சியர் எச்சரிக்கை

மதுரை,செப்.28: மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, செவ்வாய்க்கிழமை காலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:

மதுரை மாநகருக்கு, வைகை அணையிலிருந்து குடிநீர் ஒரு நாள் விட்டு ஒருநாள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதி குடியிருப்புகளில் மின்சாரம் பொருத்தி சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் திருடப்படுவதாக தெரிய வருகிறது.

இதனால் சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.

எனவே மின்சார மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுபவர்கள் கண்டறியப்பட்டால், குடியிருப்பு உரிமையாளரின் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

குடிநீர் திருட்டு: கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 29.09.2010

குடிநீர் திருட்டு: கலெக்டர் எச்சரிக்கை

மதுரை: மதுரை மாவட்டத்தில் குடியிருப்புகளில் மின்மோட்டார் பொருத்தி சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் திருடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான கூட்டம் கலெக்டர் காமராஜ் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: மதுரை நகருக்கு வைகை அணையில் இருந்து, ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் சீராக வினியோகிக்க படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோக நேரத்தில், குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் திருடப்படுகிறது. இதனால் வேறு சில பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கிறது. எனவே சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் பொருத்தியிருப்பது தெரிந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றார்.

 


Page 348 of 506