Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கடையநல்லூரில் குடிநீர் மேம்பாட்டு திட்டபணியை அதிகாரிகள் குழு இன்று ஆய்வு

Print PDF

தினமலர் 28.09.2010

கடையநல்லூரில் குடிநீர் மேம்பாட்டு திட்டபணியை அதிகாரிகள் குழு இன்று ஆய்வு

கடையநல்லூர்:கடையநல்லூர் நகராட்சியில் 22 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளை உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று (28ம் தேதி) காலை ஆய்வு செய்கின்றனர்.கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் கிடைத்திடும் பொருட்டு தமிழக அரசிடம் முழு மானியத்துடன் கூடிய குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் தமிழக அரசின் சார்பில் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் 22 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசன் கலந்து கொண்டனர்.

இந்த குடிநீர் மேம்பாட்டு திட்டம் மூலம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக குடிநீர் கிடைத்திடும் வகையில் மேலக்கடையநல்லூர், தெருப்பகுதி, பேட்டை, கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம் ஆகிய பகுதிகளில் புதிதாக வாட்டர் டேங்குகள் கட்டப்படுகிறது.இதனை விரைவில் மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்தும் வகையிலும் இப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலும் கடையநல்லூரில் இன்று (28ம் தேதி) உயர்மட்ட அதிகாரிகள் குழு திட்டம் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். குழாய்கள் புதுப்பிக்கப்படுவது குறித்தும், வாட்டர் டேங்குகள் அமைக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பாகவும், குடிநீர் அனைவருக்கும் சீராக கிடைத்திடுவதற்கு மேற்கொள்ள வேண்டியது குறித்தும் இந்த ஆய்வில் ஆராயப்பட உள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தனியார் துறை இன்ஜினியர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து 22 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டு விழா காணப்பட்டுள்ள கடையநல்லூர் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுவை மார்க்கெட் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன் 28.09.2010

புதுவை மார்க்கெட் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புதுச்சேரி, செப். 28: புதுவை மாநிலத்தில் 50 மைக்ரானுக்கு குறைவான எடை யுள்ள பை, தட்டு, கப் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த சில நாட்களுக்கு முன்பு அரசு தடை விதித்தது. ஆனால் மெல்லிய பிளாஸ் டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

இந்நிலையில் புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதாக வருவாய்த்துறைக்கு புகார் வந்தது. அதன்படி, புதுச்சேரி தாசில் தார் தில்லைவேல் தலைமை யில் தேசிய அறிவியல் சுற்றுச்சூழல் துறை அதிகாரி ரமேஷ், துணை தாசில்தார் சிவசங்கரன் மற்றும் நக ராட்சி அதிகாரிகள் பெரிய மார்க்கெட்டில் உள்ள கடை களில் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தமுள்ள 394 கடைகளில் சோதனை செய்ததில் 200க்கும் மேற்பட்ட கடைகளில் தடை மீறி 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அந்த பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாசில்தார் தில்லைவேலிடம் கேட்டபோது, `பெரிய மார்க்கெட் பகுதி யில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியதில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணி, காகிதப் பைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம். மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம். இதுபோல் நகரின் எல்லா பகுதிகளிலும் கடைகளில் சோதனை நடத்தப்படும். தடை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத் தும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார். அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையால் பெரியமார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

வரி செலுத்தாத வீடுகளில் இன்று முதல் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன் 27.09.2010

வரி செலுத்தாத வீடுகளில் இன்று முதல் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

நெல்லை, செப். 27: வரிசெலுத்தாத வீடுகள் மற்றும் கடைகளில் இன்று முதல் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து பாளை மண்டல உதவி கமிஷனர் பாஸ்கர், உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்திற்கு உட்பட்ட கட்டிடங்களுக்குரிய செத்துவரி, குடிநீர் கட்டணம், மாநகராட்சி கடைகளுக்கான குத்தகை தொகை மற்றும் இதர வரியினங்களை நிலுவையின்றி செலுத்த பலமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாளை மண்டலத்தில் புதுப்பேட்டை, ராஜேந்திரநகர், பெருமாள் மேலரதவீதி, மாடத்தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, சீனிவாசநகர், கவிதாநகர், வி.எம்.சத்திரம், பெரியார்நகர், செயின்ட் பால்ஸ்ரோடு, திருச்செந்தூர்ரோடு, சொக்கலிங்கம் சுவாமி கோயில் தெரு, சீவலப்பேரி ரோடு, செந்தில் நகர், குலசேகர ஆழ்வார்தெரு, சிவன் கோயில் தெரு, திம்மராஜபுரம், கக்கன்நகர், வெங்கடேஷ்வரா நகர், சாந்திநகர், ரஹ்மத்நகர்,வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, கேடிசி நகர் ஆகிய பகுதிகளில் பலர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை இதுவரை செலுத்தாமல் உள்ளனர்.

இப்பகுதிகளில் இன்று முதல் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே பொதுமக்கள் நிலுவையின்றி வரியினங்களை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 


Page 351 of 506