Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லையில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை

Print PDF

தினகரன் 24.09.2010

நெல்லையில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை

நெல்லை, செப். 24: நெல்லை யில் மோட்டார் மூலம் குடி நீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாநகராட்சி பகுதியில் நாளுக்குநாள் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. பாளை, என்.ஜி.. காலனி, அன்புநகர், மேலப்பாளையம், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

வாரத்திற்கு ஒருமுறை அல்லது 2 தடவை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் சரியாக வராததால் பெரும்பாலானோர் வீடுகளில் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதனால் அருகில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்பேரில் 4 மண்டலங்களிலும் உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் ஊழியர்கள் சென்று மோட்டார்களை பறிமுதல் செய்கின்றனர்.

மேலும் அந்த வீடுகளின் இணைப்புகளும் துண்டிக்கப்படுகின்றன. இருப்பினும் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது குறைந்தபாடில்லை. மாநகராட்சி தலைமை பொறியாளர் ஜெய்சேவியர் கூறும் போது, ''மாநகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக 19 முதல் 26 வரையிலான வார்டுகளில் ரூ.17 கோடியில் புதிய குடிநீர் தொட்டி அமைக் கும் பணி நடந்து வருகிறது. வண்ணார்பேட்டை ராமலிங்கமுதலியார் தெரு, குறிச்சி போன்ற பகுதிகளி லும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.

என்.ஜி.. காலனியில் 60 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. புதிய விரிவாக்க பகுதியால் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. எனவே லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்கிறோம்.

50 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்துள்ளதால் அவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் குடிநீர் பிரச்னை இருக்காது. பொதுமக்கள் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சக் கூடாது.

குடிநீர் உறிஞ்சுவோர் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சியில் '1800' என்ற இலவச தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர 4 மண்டல உதவி செயற்பொறியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கலாம். நெல்லை மண்டலம் 94422&01305, தச்சநல்லூர் 94422&01301, பாளையங்கோட்டை 94422&01304, மேலப்பாளையம் 94422& 01307. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்'' என்றார்.

 

பாளையில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு 27ம் தேதி முதல் ஜப்தி நடவடிக்கை

Print PDF

தினகரன் 24.09.2010

பாளையில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு 27ம் தேதி முதல் ஜப்தி நடவடிக்கை

நெல்லை, செப்.24: பாளையில் வரி கட்டாத 4 வீடுகளில் நேற்று குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரிபாக்கி உள்ளது. பல வர்த்தக நிறுவனங்களும், கடைகளும் ஆண்டுக்கணக்கில் வரிபாக்கியை செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றன. மாநகராட்சி வரிவசூல் வாகனம் மூலம் தீவிர வரிவசூல் முகாம் ஒவ்வொரு பகுதியாக நடத்தப்பட்டாலும், சிலர் அதற்கு டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து புகார்கள் மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்கு சென்றன.

கமிஷனர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மண்டலத்திலும் கடந்த 5 ஆண்டுகளாக சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாளை மண்டத்தில் உதவி கமிஷனர் பாஸ்கர் உத்தரவின் பேரில் நேற்று உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் வரிபாக்கியை வசூலிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் வருவாய் உதவியாளர்கள் கருணாகரன், அனந்த கிருஷ் ணன், முத்துகிருஷ்ணன், வடிவேல் முருகன் ஆகியோர் இடம்பெற்றனர்.

கமிஷனர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மண்டலத்திலும் கடந்த 5 ஆண்டுகளாக சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாளை மண்டத்தில் உதவி கமிஷனர் பாஸ்கர் உத்தரவின் பேரில் நேற்று உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் வரிபாக்கியை வசூலிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் வருவாய் உதவியாளர்கள் கருணாகரன், அனந்த கிருஷ் ணன், முத்துகிருஷ்ணன், வடிவேல் முருகன் ஆகியோர் இடம்பெற்றனர்.

இக்குழுவினர் நேற்று பாளை திருச்செந்தூர் சாலை, வி.எம்.சத்திரம் ஆகிய இடங்களில் வரிபாக்கி செலுத்தாத 4 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். சில கடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக சொத்து வரியை செலுத்த முன்வந்தனர். ‘மாநகராட்சி பகுதியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வரிபாக்கி செலுத்தாமல் இருப்பவர்கள் வரும் 26ம் தேதிக்குள் வரிசெலுத்த வேண்டும். அதன்பின் கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என கமிஷனர் எச்சரித்துள்ளார்.

 

குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினகரன் 24.09.2010

குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல், செப். 24; குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வத்தலக்குண்டு பெரியகுளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம்(60). இவர் திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றதில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது வீட்டிற்கு சேவுகம்பட்டி பேரூராட்சியில் இரண்டு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். குடிநீர் இணைப்புக்கு ரூ.10ஆயிரம் போக தனிப்பட்ட முறையில் அலுவலக செலவிற்கு அதிகாரிகளுக்கு தலா ரூ.10ஆயிரம் கொடுத்து குடிநீர் இணைப்பு பெற்றேன். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு எந்த அறிவிப்பும் இன்றி திடீரென பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பை துண்டித்துவிட்டது.

இதுகுறித்து பல முறை பேரூராட்சி நிர்வாக ஊழியர்களிடம் கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லை என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபாலன், 31ம் தேதிக்குள் நாகரத்தினத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் அவரது மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவிற்கு ரூ.2 ஆயிரமும் பேரூராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டார்.

 


Page 352 of 506