Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி அலுவலகத்தில் மீண்டும் புரோக்கர்கள்: ஆணையரைக் கண்டதும் ஓட்டம்

Print PDF

தினமணி 22.09.2010

மாநகராட்சி அலுவலகத்தில் மீண்டும் புரோக்கர்கள்: ஆணையரைக் கண்டதும் ஓட்டம்

சேலம், செப். 21: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடமாடிய இடைத் தரகர்களை மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை விரட்டினார்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது, உதவித் தொகைகள் பெறுவது போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பதற்காக பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சில இடைத்தரகர்கள் பணிகளை செய்து கொடுத்து வந்தனர்.

÷பிறப்பு, இறப்பு சான்றுகள் பெற்றுத் தருவதற்காக அப்பாவி பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் ரூ. 500 வரை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மாநகராட்சி ஆணையர், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புற வாயில் வழியாக காரில் வந்த ஆணையர், உள்ளே நுழைந்ததும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த இடைத் தரகர்களிடம் விசாரணை நடத்தினார். இதனைக் கண்டதும் மற்ற இடைத்தரகர்கள் ஓட்டம்பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து நகர் நல அலுவலர் அலுவலகத்தில் வீடு தேடி வரும் பிறப்பு இறப்பு சான்றிதழ் அனுப்பும் முறையை திடீரென அவர் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் கூறும்போது, சேலம் மாநகராட்சியில் இடைத் தரகர்களை ஒழிப்பதற்காக, பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கோருபவர்களிடம் சுய முகவரியிட்ட அஞ்சல் உறையைப் பெற்றுக் கொண்டு அந்த முகவரிக்கே சான்றிதழ்களை அனுப்பி வைத்து வருகிறோம்.

கடந்த மூன்று நாள்களில் சுமார் 175 விண்ணப்பதாரர்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு சான்றிதழ் வந்து சேரவில்லை என்றால் 94874 28080 என்ற செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறியலாம் என்றார் ஆணையர். நகர் நல அலுவலர் டாக்டர் பொற்கொடி, துணை ஆணையர் நெப்போலியன், மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா உடனிருந்தனர்.

 

மாட்டுத்தாவணியில் ஆக்கிரமிப்பு: ரூ. 1.5 லட்சம் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 22.09.2010

மாட்டுத்தாவணியில் ஆக்கிரமிப்பு: ரூ. 1.5 லட்சம் பொருள்கள் பறிமுதல்

மதுரை,செப். 21: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, வாரம் இருமுறை ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வகையில் மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின் தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் திங்கள்கிழமை திடீர் ஆய்வு செய்தனர். எளிதில் தீப்பிடிக்கக் கூடிய மண்ணெண்ணெய் அடுப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகள் உபயோகிக்கப்படுகின்றனவா என சோதனை செய்தனர்.

அப்போது நடைபாதையை ஆக்கிரமித்து விற்பனைக்காக வைத்திருந்த பொருள்களை ஊழியர்கள் அகற்றினர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த 3 சைக்கிள்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும், ஆணையர் முன்னிலையில் பறிமுதல் செய்தனர். அவை மாநகராட்சி பண்டகச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

மொத்தம் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக, ஆணையர் செபாஸ்டின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஆய்வின்போது உதவி ஆணையர் (வருவாய்) எம்.ஆசைத்தம்பி, சந்தை கண்காணிப்பாளர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கட்டட ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

 

குப்பை தொட்டியில் போஸ்டர் ஒட்டினால் வழக்கு நெல்லை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன் 22.09.2010

குப்பை தொட்டியில் போஸ்டர் ஒட்டினால் வழக்கு நெல்லை மாநகராட்சி அறிவிப்பு

நெல்லை, செப்.22: குப்பை தொட்டிகள் மீது போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத் தை செயல்படுத்தும் வகையில் நெல் லை மாநகராட்சியில் 4.5 டன் கொண்ட 140 குப்பை தொட்டிகளும், பச்சை கலர் குப்பை தொட்டிகள் 280ம் வைக்கப்பட்டுள்ளன. தெருக்களில் உள்ள இக்குப்பை தொட்டிகள் மீது அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின் றன. சில இடங்களில் குப்பை தொட் டியே தெரியாத அளவுக்கு போஸ்டர்கள் மறைத்து வருகின்றன.

இதை தடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சுகாதார துறை தீர்மானித்துள்ளது. பாளை திருவனந்தபுரம் சாலையில் சித்தா கல்லூரி, பாளை மண்டல அலுவல கம், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றின் அருகேயுள்ள குப்பை தொட்டிகளில் பல்வேறு கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவற்றை அகற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுகாதார ஆய்வாளர் சாகுல்ஹமீது நேற்று பாளை போலீசில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ஆலோ சித்து வருகின்றனர்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தெருவில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் மீது யாராவது போஸ்டர் ஒட்டினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என கமிஷனர் சுப்பையன் எச்சரித்துள்ளார்.

 


Page 354 of 506