தினமலர் 21.09.2010
விருத்தாசலம் நகராட்சி மீது நடவடிக்கைக்கு கோரிக்கை
விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத் துள்ளது.
இம்மைய தலைவர் செந்தமிழ்ச்செல்வன் கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள மனு: விருத்தாசலம் 30வது வார்டு ராஜவேல் வீதியில் நகராட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் செலவில் 52 கடைகள் கொண்ட காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு திறக்கப் பட்டது. இந்த மார்க் கெட்டிற்கு நுழைவு வாயில், கதவுகள், முறையான குடிநீர், கழிவு நீர் வசதிகள் செய்யப்படவில்லை.மார்க்கெட் திறக்கப் பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பயனற்ற நிலையிலேயே உள்ளது. தற்போது சிலர் இந்தக் கடைகளை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். அரசு பணத்தை வீணடித்து பல லட்சம் நஷ்டம் ஏற்படுத்திய விருத்தாசலம் நகராட்சி மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது