Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகளை திறக்க தாமதம் ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினகரன்                03.01.2014

புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகளை திறக்க தாமதம் ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சி நோட்டீஸ்

தேனி, : தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை ஏலம் எடுத்தவர்கள், அவற்றை திறக்காமல் உள்ளனர். இதனால் பயணிகள் சிரமப்படுவதால், ஏலதாரர்கள் கடைகளுக்கான வாடகை முன்பணத்தை உடனடியாக செலுத்தி கடைகளை திறக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேனியில் இருந்து பெரியகுளம் செல்வதற்கான பை-பாஸ் சாலையில் 7.35 ஏக்கர் நிலத்தில் ரூ.15 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டுள்ளது.

 இந்த பஸ் ஸ்டாண்டில் 67 கடைகள், 2 உணவகங்கள், 6 நவீன கட்டணக் கழிப்பறைகள், 2 இலவச கழிப்பறைகள், பொருள்கள் வைப்பறைகள், 3 வாகனங்கள் நிறுத்தும் இடம், புறக்காவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி,  பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. பஸ் ஸ்டாண்ட்டிற்கு முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் பெயர் சூட்டப்பட்டது.

 கடந்த 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் இந்த பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார்.
தேனி நகரில் இருந்து 2 கி.மீ தொலைவில் இந்த பஸ் ஸ்டாண்ட் உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் 67 கடைகள் இருந்த போதிலும், இதுவரை ஒரு கடையும் திறக்கப்படவில்லை.

கட்டண கழிப்பறைகளும், டூவீலர் ஸ்டாண்டுகளும் திறக்கப்படவில்லை. இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பயணிகள் புகார் செய்து வருகின்றனர். இதையடுத்து தேனி-அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதில், ‘கடை உள்ளிட்ட பிற இனங்களை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், நோட்டீஸ் பெற்ற 15 நாட்களில் ஒரு ஆண்டுக்கான வாடகை தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.

ரூ.20 பத்திரத்தில் உறுதிமொழி ஒப்பந்தம் எழுதி அதனையும் இணைத்து நகராட்சியில் ஒப்படைத்து, கடைகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனடியாக கடைகளை திறக்க வேண்டும்‘ என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராஜாராம் கூறுகையில், “புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்துக் கடைகளும் கடந்த ஆண்டே ஏலம் விடப்பட்டன.

 ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் ஒரு ஆண்டிற்கான வாடகையை டெபாசிட்டாக செலுத்தி, பத்திரத்தில் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து விட்டு, கடையை உடனடியாக திறக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது“ என்றார். 

 

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்களில் "சேவை தகவல் பலகை'

Print PDF

தினமணி                 03.01.2014

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட  அலுவலகங்களில் "சேவை தகவல் பலகை'

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்களில் சேவை தகவல் பலகை அமைக்கப்படுகிறது.

பெங்களூரு ஜெயநகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேவை தகவல் பலகையை அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார், மாநகராட்சியின் பொதுப் பணி நிலைக் குழுத் தலைவர் பசவராஜ் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பசவராஜ் கூறியது:

பெங்களூரு ஜெயநகரில் சகாலா திட்ட மாதிரியில் அனைத்துப் பிரிவுகளின் தகவல் அடங்கிய பலகை மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், மாநகராட்சியின் சேவைகள், அதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜெயநகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முறையாக இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளோம். விரைவில் 8 ம்ண்டலங்களில் உள்ள 191 மாநகராட்சி அலுவலங்களிலும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும்.

மின் வாரியம், குடிநீர் வாரியம். காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் இது போன்று தகவல் பலகை அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்த மாநகராட்சி ஆணையரிடம் கோரப்படும்.

வார்டு எண் 198-இல் எமிகேபூர் பகுதியில் கழிப்பறை, ஆழ்துளைக் கிணறு, பேருந்து நிலையம் அமைக்கவும், சாலைகளைச் சீரமைக்கவும் ரூ. 49.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.  வார்டு எண் 58-இல் சி.வி.ராமன் நகரில் ரூ. 50 லட்சத்தில் கெம்பே கெüடர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

 

சாலைப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி                 03.01.2014

சாலைப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரோவர் வளைவிலிருந்து, எளம்பலூர் இணைப்பு சாலை வரையிலும் ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், சீரான போக்குவரத்தை உருவாக்கும் வகையிலும், சாலையில் மழைநீர் தேங்காத வகையிலும் சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், புதிய பேருந்து நிலைய வாளாகத்தை விரிவுபடுத்த தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பெரம்பலூர் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார் ஆட்சியர் தரேஸ் அஹமது. இந்த ஆய்வின்போது, நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தாண்டவமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

 


Page 37 of 506