Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லை வீடுகளில் குடிநீர் மோட்டார்15 மின் மோட்டார்கள் பறிமுதல்": மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினமலர் 27.08.2010

நெல்லை வீடுகளில் குடிநீர் மோட்டார்15 மின் மோட்டார்கள் பறிமுதல்": மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருநெல்வேலி:நெல்லையில் வீடுகளில் குடிநீர் இணைப்பில் பொறுத்தப்பட்டிருந்த 15 மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னை இருந்துவருகிறது. வீட்டுக் குடிநீர் இணைப்பில் சட்ட விரோதமாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதாக கமிஷனருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் மாநகரப் பொறியாளர் ஜெய்சேவியர் தலைமையில் செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக்கமிஷனர்கள் சுல்தானா, சாந்தி கருப்பசாமி, பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் சாமுவேல் செல்வராஜ் அடங்கிய குழுவினர் 4 குழுக்களாக பிரிந்து 4 மண்டலங்களிலும் திடீர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்டிருந்த 15 மின் மோட்டார் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மின் மோட்டார் பொருத்திய இணைப்புகளை துண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்தல், சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் இணைப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீண்டும் இணைப்பு வழங்குவது பரிசீலிக்கப்படாது எனவும் கமிஷனர் சுப்பையன் அறிவித்துள்ளார்.

 

நெல்லை ஸ்வீட் தயாரிப்பு குடோனுக்கு ‘சீல்’

Print PDF

தினகரன் 27.08.2010

நெல்லை ஸ்வீட் தயாரிப்பு குடோனுக்கு சீல்

நெல்லை, ஆக. 27: சுகாதார சீர்கேடு காரணமாக நெல் லை சந்திப்பில் உள்ள ஒரு ஸ்வீட் தயாரிப்பு குடோ னுக்கு மாநகராட்சி அதிகாரி கள் நேற்று சீல் வைத்தனர்.

நெல்லை மதுரை சாலை யை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு சொந்தமான ஸ்வீட் தயாரிப்பு சந்திப்பு ஆவின்பாலகம் அருகே இயங்கி வருகிறது. இந்த ஸ்வீட் ஸ்டாலுக்கான குடோன் செய்யது லாட்ஜில் இயங்கி வருகிறது.

இந்த குடோனில் சுகா தார சீர்கேடுகள் நிறைந்து இருப்பதாகவும், அசுத்த மான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாகவும் மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்கு புகார்கள் வந் தன. மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி சாந்தி தலைமையில் உணவு ஆய் வாளர் சங்கரலிங்கம், சுகா தார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், அந்தோணி, துப்பு ரவு மேற்பார்வையா ளர் பழனி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று குடோ னுக்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்குள்ள பொருட்கள் அழுக்கடைந்த நிலையிலும், ஸ்வீட் வகைகள் சுகாதாரமற்ற முறையிலும் தயாரிப் பதை கண்டறிந்தனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். இதுபோல் தொடர்ந்து மற்ற குடோன்களிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நெல்லை சந்திப்பில் உள்ள சுவீட் தயாரிப்பு குடோனில் சுகாதார சீர்கேடுகள் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

வீடுகள் ஆக்கிரமிப்பு தொடர்கிறது குப்பை கிடங்காக மாறும் நயினார்குளம் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய 15 மின்மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்    27.08.2010

வீடுகள் ஆக்கிரமிப்பு தொடர்கிறது குப்பை கிடங்காக மாறும் நயினார்குளம் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய 15 மின்மோட்டார்கள் பறிமுதல்

நெல்லை, ஆக.27: நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சிய 15 மின்மோட்டார்களை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாநகராட்சி பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பில் சட்டவிரோத மாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது சம்பந்தமாக கமிஷனர் சுப்பையனுக்கு ஏராளமாக புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகர பொறியாளர் ஜெய்சேவியர் தலைமையில் நெல்லை மண்டல உதவி கமிஷனர் சாந்தி, பாளை மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன், தச்சை மண்டல உதவி கமிஷனர் சுல்தானா, மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் கருப்ப சாமி ஆகியோர் தலைமை யில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட் டன. குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்பு மற்றும் சட்டவிரோத மின்மோட்டார் இணைப்புகள் குறித்து இந்த குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 15 மின்மோட்டார்கள் பறி முதல் செய்யப்பட்டன.

5 மின்மோட்டார் பொருத்திய இணைப்பு களை துண்டிக்க அதிகாரி கள் நடவடிக்கை எடுத்தனர். 'அனுமதியின்றி குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்துபவர்கள், சட்டத்திற்கு புறம் பாக குடிநீர் இணைப்பில் மின்மோட் டார் பொருத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரி கள் எச்சரித்துள்ளனர். மேலும் இத்தகைய நபர்களுக்கு திரும்பவும் இணைப்பு கொடுக்க கோரி வரும் மனுக்கள் பரிசீலிக்கப் பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளனர்.

பாசன மடைகளை சீரமைக்க வலியுறுத்தல்

நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் சட்ட விரோதமாக குடிநீர் எடுத்த மின் மோட்டார்களை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 


Page 368 of 506