Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் ரூ.1 லட்சம் அபராதம்

Print PDF

தினமலர் 25.08.2010

நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் ரூ.1 லட்சம் அபராதம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத் திற்கு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறா விட்டால் நகராட்சி அதிகாரிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படுமென எச்சரித்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டு வரப் பட் டது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அந் தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. ஆடு அறுக்கும் கூடத்துக்கு 26 லட்சம் ரூபாய் செலவில் நவீன முறையில் கட்டடம் கட்டடப் பட்டு திறக்கப்படாததால் சுகாதார குறைவாக திறந்த வெளியில் ஆடுகளை அறுக் கின்றனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியில் உள்ளனரா என சந்தேகமாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை, ஆடு அறுக்கும் கூடத்துக்கு மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெற வேண்டும். அதை ஆண்டு தோறும் புதுப்பிக்க வேண்டும். நெல்லிக் குப்பம் நகராட்சியில் இந்த இரண்டு திட் டத்துக்கும் கடந்த 6 வருடமாக மாசு கட் டுப்பாடு வாரிய அனுமதி பெறவில்லை. பலமுறை நினைவூட்டல் கடிதம் எழுதியும், சுகாதாரத்துறை அலுவலர் அனுமதி வாங்காமல் அலட்சியமாக உள்ளார். இந்நிலையில் உடனடியாக அனுமதி பெறாவிட்டால் சட்டப்படி ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படுமென நகராட்சி கமிஷனருக்கு, மாசு கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ் அனுப் பியுள்ளது.இந்த அனுமதியை பெற வேண்டியது சுகாதார அலுவலரின் வேலையாகும். அவரது அலட்சியத்தால் அதிகாரிகள் சிக்கலில் மாட்டியுள்ளனர். உடனடியாக அனுமதி பெற நடவடிக்கை எடுக்கா விட் டால் அதனால் கிடைக்கும் தண்டனையை சுகாதார அலுவலரையே சாரும் என அவருக்கு கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Last Updated on Wednesday, 25 August 2010 07:36
 

ஆத்தூர் நகராட்சியில் மண்டல இயக்குனர் ஆய்வு

Print PDF

தினமலர் 25.08.2010

ஆத்தூர் நகராட்சியில் மண்டல இயக்குனர் ஆய்வு

ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சியில் 3.93 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட உள்ள சாலைகளை நகராட்சிகளின் மண்டல இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். ஆத்தூர் நகராட்சிக்குப்பட்ட 33 வார்டுகளிலும் உள்ள சாலைகள் 3.93 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட உள்ளது. புதுப்பிக்கப்பட உள்ள சாலைகளை நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ஆத்தூர் நகராட்சி கமிஷனர் மணிகண்டன், பொறியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

தேனிக்கு புதிய குடிநீர் திட்டம் நிர்வாக இயக்குனர் தகவல்

Print PDF

தினமலர் 25.08.2010

தேனிக்கு புதிய குடிநீர் திட்டம் நிர்வாக இயக்குனர் தகவல்

தேனி : தேனிக்கு நிரந்தர புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது என நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார். நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் நேற்று தேனி பகுதியில் ஆய்வு செய்தார். புதிய பஸ்ஸ்டாண்ட் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். அவர் கூறுகையில், தேனிக்கு நிரந்தர புதிய குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. லோயர் கேம்ப், வைகை அணையில் இருந்து கொண்டு வருவது குறித்து ஆய்வு நடக்கிறது. பஸ்ஸ்டாண்ட் பணிகள் விரைவில் துவங்கும் என்றார். பாதாள சாக்கடை திட்டத்திற்கான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் பணிகளை பார்வையிட் டார்.நகராட்சி தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் இலங்கேஸ்வரன், கமிஷனர் மோனி, பொறியாளர் கணேசன் உட்பட நகராட்சி அலுவலர்கள் உடன் சென்றனர்.

 


Page 370 of 506