Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

"ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுத்தால் நடவடிக்கை'

Print PDF

தினமணி 19.08.2010

"ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுத்தால் நடவடிக்கை'

பெரம்பலூர், ஆக. 18: பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுக்கும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பெரம்பலூர் நகராட்சி ஆணையர் அ. அசோக்குமார் தெரிவித்தார்.

பெரம்பலூர் நகரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டது.

பெரம்பலூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலை ஓரங்களில் இயங்கி வரும் வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் உத்தரவின் பேரில், நகராட்சி ஆணையர் அ. அசோக்குமார், வருவாய்க் கோட்டாட்சியர் ச. பாலுசாமி, வட்டாட்சியர் கு. கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான பணியாளர்கள் நகராட்சிக்கு உள்பட்ட பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், அஞ்சல் அலுவலகப் பகுதி, கடைவீதி, திருச்சி பிரதான சாலை பகுதி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்ட துறையூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் அ. அசோக்குமார் கூறியது:

பெரம்பலூர் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள நிரந்தர, தாற்காலிக ஆக்கிரமிப்புப் பகுதிகள் அகற்றப்படுகிறது.

இதேபோல, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை ஓரங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. மேலும், பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுப்பவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும் என்றார் அவர்.

Last Updated on Thursday, 19 August 2010 10:45
 

டெங்கு காய்ச்சல் பரவியுள்ள ஜாமியா நகரில் மேயர் ஆய்வு மக்கள் எதிர்ப்பால் பாதியில் ரத்து

Print PDF

தினகரன் 19.08.2010

டெங்கு காய்ச்சல் பரவியுள்ள ஜாமியா நகரில் மேயர் ஆய்வு மக்கள் எதிர்ப்பால் பாதியில் ரத்து

புதுடெல்லி, ஆக.19: டெங்கு காய்ச்சல் அதிகம் பரவியுள்ள ஜாமியா நகரில் மேயர் சகானி நேற்று ஆய்வு செய்தார். ஆனால், மாநகராட்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆய்வை பாதியிலேயே ரத்து செய்து மேயர் திரும்பினார்.

டெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஜாமியா நகர் பகுதியில்தான் இந்த காயச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜாமியா மற்றும் ஒக்லா பகுதியில் டெங்குவுக்கு 15 பேர் இறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால், டெல்லியில் டெங்குவுக்கு இதுவரை 2 பேர் மட்டுமே இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

ஜாமியா மற்றும் ஒக்லா பகுதியில் கழிவு நீர் தேங்கி, கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதே டெங்கு பரவ காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இப்பகுதியில் சுகாதாரப் பணியை விரைவுப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் பரவியுள்ள பகுதிகளை ஆய்வு செய்யவும் மாநகராட்சி மேயர் பிரிதிவிராஜ் சகானி முடிவு செய்தார். மாநகராட்சி அவை முன்னவர் சுபாஷ் ஆர்யா மற்றும் அதிகாரிகளுடன் ஜாமியா நகருக்கு நேற்று மதியம் 12.30 மணிக்கு சகானி சென்றார். அப்பகுதி மக்களுடன் ஆலோசனை நடத்த தொடங்கினர்.

கவுன்சிலர் முகமது ஜமாலுதின், வாய்க்கால்கள் தூர் எடுக்காமல் கழிவு நீர் தேங்கியிருப்பது பற்றி மேயரிடம் கூறினர். வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு மாநகராட்சி அவை முன்னவர் ஆர்யா கூறுகையில்,‘இப்பகுதியில் உள்ள வாய்க்கால், .பி. மாநில பாசனத்துறைக்கு சொந்தமானது. அதனால், அதை தூர் வாரும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள முடியாதுஎன்றார்.

இதை அப்பகுதி மக்கள் ஏற்கவில்லை, மேயரையும் மாநகராட்சியையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அதிகாரிகளு க்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் அடிதடி ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆய்வு பணி யை பாதியிலேயே ரத்து செய்து விட்டு மேயர் சகானி திரும்பினார். மாநகராட்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி மேயரின் உருவ பொம்மையை எரித்தனர்.

இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘ஜாமியா நகரில் குப்பைகளும், கட்டுமான கழிவுகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் மழை நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் நகரமாகவே ஜாமியா நகர் மாறிவிட்டது. 2 லட்சம் மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு 18 துப்புரவு தொழிலாளர்தான் ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்த கால்வாய் உபி. மாநிலத்துக்கு சொந்தமானது என்றாலும், மாநகராட்சி தனது சொந்த செலவில் தூர்வாரி வந்தது. ஆனால், இப்போது நிதி பற்றாகுறையால் இந்தப் பணியை மேற்கொள்ள மாநகராட்சி மறுக்கிறதுஎன்றனர்.

இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘ஜாமியா நகரில் குப்பைகளும், கட்டுமான கழிவுகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் மழை நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் நகரமாகவே ஜாமியா நகர் மாறிவிட்டது. 2 லட்சம் மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு 18 துப்புரவு தொழிலாளர்தான் ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்த கால்வாய் உபி. மாநிலத்துக்கு சொந்தமானது என்றாலும், மாநகராட்சி தனது சொந்த செலவில் தூர்வாரி வந்தது. ஆனால், இப்போது நிதி பற்றாகுறையால் இந்தப் பணியை மேற்கொள்ள மாநகராட்சி மறுக்கிறதுஎன்றனர்.

Last Updated on Thursday, 19 August 2010 08:36
 

வரி பாக்கியை செலுத்தாததால் கரன்சி அச்சகத்துக்கு ரூ.240 கோடி அபராதம்

Print PDF

தினகரன் 19.08.2010

வரி பாக்கியை செலுத்தாததால் கரன்சி அச்சகத்துக்கு ரூ.240 கோடி அபராதம்

நாசிக், ஆக. 19: நாசிக் கரன்சி அச்சகத்துக்கு மாநகராட்சி ரூ.240 கோடி அபராதம் விதித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அச்சகம், நாசிக் மாநகராட்சிக்கு ரூ.24 கோடி ஆக்ட்ராய் வரி பாக்கி வைத்துள்ளது. இதை செலுத்த தவறியதற்காக ரூ.240 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து நாசிக் மாநகராட்சி கமிஷனர் பாஸ்கர் சனாப் கூறியதாவது: கடந்த 2006ம் ஆண்டு மார்ச் முதல் 2010ம் ஆண்டு மார்ச் வரை ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ரூ.795.98 கோடி மதிப்புள்ள உயர் தர காகிதங்களை நாசிக் அச்சகம் இறக்குமதி செய்துள்ளது. இதற்கு நுழைவு வரியாக ரூ.24 கோடி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த வரி செலுத்தப்படவில்லை.

இது தொடர்பாக பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் வரி செலுத்தப்படவில்லை. எனவே, செலுத்த வேண்டிய வரிக்கு நிகராக பத்து மடங்கு தொகை, அதாவது ரூ.240 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மத்திய அரசு ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். இவ்வாறு சனாப் கூறினார்.

Last Updated on Thursday, 19 August 2010 08:36
 


Page 373 of 506