Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லையில் இனிப்பு கடை "சீல்' உடைப்பு: மீண்டும் சீல் வைக்க எதிர்ப்பு

Print PDF

தினமணி 13.08.2010.

நெல்லையில் இனிப்பு கடை "சீல்' உடைப்பு: மீண்டும் சீல் வைக்க எதிர்ப்பு

திருநெல்வேலி,ஆக.12: திருநெல்வேலியில் சுகாதாரக் கேடாக இருந்ததாக "சீல்' வைக்கப்பட்ட இனிப்புக் கடை கிட்டங்கி, சீல் உடைத்து திறக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கு மீண்டும் சீல் வைக்க சென்றபோது, எதிர்ப்பு தெரிவித்து சிலர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி, சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரத்தில் ஒரு இனிப்புக் கடைக்குச் சொந்தமான கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கியில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற எரிபொருள் பயன்படுத்தப்படுவதாகவும் அப் பகுதி மக்கள், மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர்.

இப் புகாரின் அடிப்படையில் அங்கு திடீர் சோதனை மேற்கொண்ட மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், அந்த கிட்டங்கி மிகவும் சுகாதார சீர்கேடாக செயல்படுவதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த கிட்டங்கியை பழுது நீக்கி, சுகாதாரத்துடன் இயக்குமாறு அந்த கிட்டங்கியின் உரிமையாளர் ஜலாலுதீனுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.

ஆனால் அவர், அந்த கிட்டங்கியை சீரமைக்கவும் இல்லை, சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்கவும் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஜூன் 17-ல் அந்த கிட்டங்கிக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைலாசபுரம் பகுதியில் ஆய்வுக்குச் சென்றபோது, அங்கு அந்த கிட்டங்கி சீல் உடைக்கப்பட்டு செயல்படுவது தெரியவந்தது.

இதையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் சுல்தானா தலைமையில் வியாழக்கிழமை அந்த கிட்டங்கிக்கு சீல் வைக்க வந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த கொக்கிரகுளத்தைச் சேர்ந்த குத்புதீன் உள்ளிட்ட சிலர், மாநகராட்சி அதிகாரிகளை மீண்டும் சீல் வைக்கவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து உதவி ஆணையர் சுல்தானா, சந்திப்பு காவல் நிலையத்தில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக குத்புதீன் உள்ளிட்ட சிலர் மீது புகார் செய்தார். இதேபோல மாநகராட்சி வைத்த சீலை உடைத்ததாக ஜலாலுதீன் மீதும் சந்திப்பு காவல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் புகார்

 

குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும்

Print PDF

தினமலர் 13.08.2010

குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும்

விழுப்புரம்: வளவனூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.இது குறித்து வளவனூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வளவனூர் பேரூராட்சியில் 200க்கும் மேற்பட் டோர் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு குடிநீர் கட்டணம் செலுத் துமாறு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பலமுறை நேரிலும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. உடனடியாக கட்டணம் செலுத்தாதவர் களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அவர் கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் அனுமதி பெறா மல் குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் தற்போதைய புதிய அரசாணைப் படி புதிய குடிநீர் இணைப் புக்கான பகுதி தொகை 3,000 ரூபாய் என்பதை 6,000 ரூபாயாக செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் மின்மோட்டார் பொருத்தியுள்ளவர்களும் தாங்களாகவே இணைப்பை துண்டித் துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகம் திடீர் சோதனை செய்து குடிநீர் இணைப்பை துண்டிப்பதுடன், மின் மோட்டாரும் பறிமுதல் செய்யப்படும்.

 

பன்றிகள் வளர்த்தால் நடவடிக்கை:விழுப்புரம் கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 13.08.2010

பன்றிகள் வளர்த்தால் நடவடிக்கை:விழுப்புரம் கமிஷனர் எச்சரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் பன்றிகள் வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நகராட்சி கமிஷனர் சிவக்குமார் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் நகராட்சியில் உள்ள அனைத்து வார் டுகளிலும் பன்றிக் காய்ச் சல் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி மருத்துவ அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், நகர சுகாதார செவிலியர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கொண்ட குழுவினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.அனைத்து நாட்களிலும் துப்பரவு பணியாளர்களால் தெருக்கள், சாக்கடைகளை தூய்மையாக வைத்திருக்கவும், கொசு மருந்து தெளிக் கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்தும் வகையில் பன்றிகள் வளர்க்க கூடாது.மீறி வளர்த்தால் பன்றிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Last Updated on Friday, 13 August 2010 05:59
 


Page 377 of 506