Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

இரட்டிப்பு கட்டணம் வசூலித்தால் வாரச்சந்தை உரிமம் ரத்து நகராட்சி நிர்வாகம் தகவல்

Print PDF

தினகரன் 06.08.2010

இரட்டிப்பு கட்டணம் வசூலித்தால் வாரச்சந்தை உரிமம் ரத்து நகராட்சி நிர்வாகம் தகவல்

புதுக்கோட்டை, ஆக. 6: புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட், கழிப்பறைகள், வாரச்சந்தை, தினசரி சந்தையில் இரட்டிப்பு கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடு க்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி தலைவர் ராமதிலகம் உடையப்பன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நகராட்சி நிர்வாகத்தில் உள்ள வாரச்சந்தை, தினசரி சந்தை மற்றும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் கட்டண கழிப்பறைகளின் நகராட்சி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட கட்டணத்தைவிட இரட்டிப்பு கட்டணம் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

முதல்வர் கருணாநிதி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இன்னல்களை போக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்தாலும் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் ஒரு கிலோ அரிசி ரூ.1, மளிகை சாமான்கள் ரூ.50க்கு வழங்கி வருகிறார். எனவே நகராட்சியில் சைக்கிள் ஸ்டாண்டு, கட்டண கழிப்பறை, வாரச்சந்தை, தினசரி சந்தை ஏலம் எடுத்த ஒப்பந்தகாரர்கள் வணிக நோக்கில் கட்டணம் நிர்ணயித்து பொதுமக்களுக்கு இன்னலை உண்டாக்கி வருகின்றனர்.

பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள் ஒன்றுக்கு ரூ.2 மற்றும் மொபட்டுக்கு ரூ.4 வீதம் 24 மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம். கட்டண கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்க ரூ.1, மலம் கழிக்க ரூ.2. எனவே சைக்கிள் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறை மற்றும் வாரச்சந்தை தினமும் சந்தை ஆகிய இனங்களின் பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட இரட்டிப்பு கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் நகராட்சி தலைவரிடமோ, ஆணையரிடமோ நேரில் புகார் தெரிவிக்கலாம். குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர் உரிமம் எவ்வித முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்படும். இவ்வாறு நகராட்சி தலைவர் ராமதிலகம் தெரிவித்துள்ளார்.

 

வரி இனங்களை 10க்குள் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன் 06.08.2010

வரி இனங்களை 10க்குள் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

தொட்டியம், ஆக. 6: வரும் 10ம் தேதிக்குள் குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் தெரிவித்துள்ளார்.

தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சமேடு, தவிட்டுப்பாளையம், அக்ரஹாரம், காட்டுப்புத்தூர் நகர்பகுதி, ஆண்டாபுரம் ரோடு, காந்திநகர் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் பேரூராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற பொதுமக்கள், நிலுவை தொகை மற்றும் இம்மாதத்திற்குரிய தொகையை 10ம் தேதிக்குள் அலுவலக நேரத்தில், வேலை நாட்களில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

தவறினால் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். அபராத தொகை வசூல் செய்த பின்னரே மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். எனவே, பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி உட்பட வரி இனங்களையும் செலுத்த வேண்டும். இவ்வாறு சேகர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

குடிநீர் வழங்கும் ஏரிகளில் முதன்மை செயலர் ஆய்வு

Print PDF

தினகரன் 06.08.2010

குடிநீர் வழங்கும் ஏரிகளில் முதன்மை செயலர் ஆய்வு

சென்னை, ஆக.6: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி நீர்த்தேக்கம், செங்குன்றம் ஏரி, குடிநீர் வழங்கும் நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களை, குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் அஷோக் வர்தன் ஷெட்டி நேற்று ஆய்வு செய்தார்.

பூண்டி நீர்த்தேக்கத்தை பார்வையிட்ட அவர், கிருஷ்ணா நதிநீர் கால்வாய்களை சீர் செய்து, வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டுமென பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கான பரிசோதனை குறிப்புகளை, கணினி மூலம் கண்டறிந்து சரியான முறையில் சுத்திகரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார். அப்போது, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 06 August 2010 08:57
 


Page 379 of 506