Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விளம்பர பேனர் வைக்க கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 30.07.2010

விளம்பர பேனர் வைக்க கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி, ஜூலை 30: பொள்ளாச்சி நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பல விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விளம்பர பேனர்கள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரில் பஸ் ஸ்டாண்ட் சுற்றுவட்டாரம், கோவை ரோடு, காந்திசிலை, நியூ ஸ்கீம் ரோடு, தாலுகா அலுவலக ரோடு, மெட்ராஸ் ஓட்டல் ஜங்ஷன், தேர்நிலை உள்ளிட்ட பகுதிகளில் அள வுக்கு அதிகமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள் ளன. பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் மிகுந்த இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர். இதில் பல இடங்களில் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இப்பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் களம் இறங்கியது. அதில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பேனர்களை மட்டும் அகற்றிய நகராட்சி நிர்வாகத்தினர், அரசியல் கட்சியினரின் விளம்பர பேனர்களை போலீசார்தான் அகற்ற வேண்டும் என்று கூறினர்.

போலீஸ் தரப்பில் எந்த ஒரு விளம்பர பேனராக இருந்தாலும் அதை நகராட்சி நிர்வாகம்தான் அகற்ற வேண்டும். அதற்கு பாதுகா ப்பு கொடுப்பது மட்டுமே எங்கள் பணி என்று போலீ சார் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண ஆர்.டி. . அழகிரிசாமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோ சனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

இதில் ஆர்.டி.. அழகிரிசாமி கூறியதாவது:

நகரின் பல இடங்களில் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்களை வைத்துள்ளீர்கள். இவ்வாறானா விளம்பர பேனர்கள் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் சில அரசியல் கட்சியினர் மாதக்கணக்கில் பெரிய அளவிலான பேனர் களை வைத்துள்ளீர்கள். ஆகவே இன்று முதல் விளம்பர பேனர்கள் வைக்க அரசின் உத்தரவுகள் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பர பேனர்களை வைக்கும் அரசியல் கட்சியினர் போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண் டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடை யூறு இல்லாத இடங்களில் மட்டும் விளம்பர பேனர்கள் வைக்க போலீசாரும், நகரா ட்சி நிர்வாகமும் அனுமதி அளிக்க வேண்டும். விளம்பர பேனர்களின் நீளம், அகலம் மற்றும் உயரம் குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும்.

நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும், நிகழ்ச்சி முடிந்த பிறகு மூன்று நாட்களுக்கும் என மொத்தம் 7 நாட்கள் மட்டுமே விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் அந்தந்த அரசியல் கட்சினரே முன்வந்து விளம் பர பேனர்களை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகி யோர் இணைந்து உடனுக்குடன் பேனர்களை அகற்ற வேண்டும். இவ்வாறு அழகிரிசாமி தெரிவித்தார்.

 

விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை: மேயர் எச்சரிக்கை

Print PDF

தினமணி 30.07.2010

விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை: மேயர் எச்சரிக்கை

சென்னை, ஜூலை 29: சுவர்களில் வைத்துள்ள விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் எச்சரித்தார்.

விளம்பர பலகைகள் மூலம் பொதுமக்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து, விளம்பர பலகைகளை அகற்றும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. இருந்தபோதிலும் ஆங்காங்கே முறைகேடாக விளம்பர பலகைகள் வைக்கப்படுவதும், அகற்றப்படுவதும் நடந்து வருகின்றன.

விளம்பர பலகைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில தனியார் நிறுவனங்கள் புதிய யுக்தியாக சுவர்களில் விளம்பர பேனர்கள் வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

இந்நிலையில் சுவரில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்திற்குப் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியது:

சுவர்களில் ஒட்டப்படும் விளம்பர பேனர்களை அகற்ற கால அவகாசம் தரப்படும். அந்த கால அவகாசத்திற்குள் அகற்றவில்லையெனில், மாநகராட்சி அதிகாரிகளே விளம்பர பேனர்களை அகற்றுவர். அதற்கான செலவை, அந்தந்த நிறுவனங்கள் அல்லது உரிமையாளர்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் வசூல் செய்வர். கட்டணம் தரவில்லையெனில் போலீஸில் புகார் செய்து பாரபட்சமின்றி மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.

 

சொத்துவரி செலுத்த தவறினால் சட்டப்படி ஜப்தி நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 30.07.2010

சொத்துவரி செலுத்த தவறினால் சட்டப்படி ஜப்தி நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

தர்மபுரி, ஜூலை 30: தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் சொத்துவரி செலுத்த தவறினால் சட்டப்படி ஜப்தி நடவடிக்கை எடுக்குப்படும் என்று செயல் அலுவலர் நாகராஜன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் முதல் நிலை பேரூராட்சியில் வசிப்பவர்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 3 தினங்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை வரி விதிப்புதாரர்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 1920ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 36வது பிரிவின்படி முதல் அரையாண்டின் சொத்து வரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும், 2வது அரையாண்டின் சொத்து வரியை அக்டோபர் 30ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

2010&2011 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செலுத்தும் காலவரையறை 30.04.2010ம் தேதி முடிவடைந்தது. இதன் பின்னரும் பலர் சொத்துவரியை செலுத்தவில்லை. அவ்வாறு வரி செலுத்தாத கட்டிட உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்போர், திருமண மண்டப உரிமையாளர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கான சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுகிறது.

சொத்து வரியை செலுத்த தவறுபவர்கள் மீது ஜப்தி உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான அறிவிப்பு கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் வீட்டின் உரிமையாளர்களுக்கு மட்டுமல்லாமல் வாடகைக்கு குடியிருப்போருக்கும் பொருந்தும். இவ்வாறு நாகராஜன் தெரிவித்துள்ளார்.

 


Page 387 of 506