Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் ஆட்டோவுக்கு 20 கட்டணம் திருவள்ளூர் நகராட்சி முடிவு

Print PDF

தமிழ் முரசு             28.12.2013

பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் ஆட்டோவுக்கு 20 கட்டணம் திருவள்ளூர் நகராட்சி முடிவு

திருவள்ளூர்:பெரியகுப்பம் பஸ் நிலையத்துக்குள் வரும் ஆட்டோவுக்கு ஒரு நாளைக்கு 20ரூபாய் வசூலிப்பது என்று திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.திருவள்ளூர் நகரமன்ற கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஆணையர் அக்ஷயா, பொறியாளர் பாபு, சுகாதார அலுவலர் மோகன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்னைகள் பற்றி பேசினர்.

இதன்பிறகு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருவள்ளூர் நகரில் நவீன ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கவேண்டும். கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். ஸ்ரீவீரராகவபெருமாள் கோயில் குளத்துக்கு நீர்வர தனி கால்வாய் அமைத்து முழுவதும் தண்ணீர் நிரப்ப வேண்டும். பெரியகுப்பம் பஜாரில் ஆட்டோக்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் நகராட்சி நிதியை பெருக்கும் வகையிலும் பெரியகுப்பம் பஸ் நிலையத்துக்குள் வருகின்ற ஆட்டோவுக்கு ஒரு நாளைக்கு 20  ரூபாய் வசூலிக்க வேண்டும். 17வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீபாலாஜி நகர், இந்திரா நகர் பகுதிகளை மண்டலம் ‘ஏ‘ வில் இருந்து மக்கள் நலன் கருதி பி மண்டலத்துக்கு விதிமுறைகள் படி மாற்றவேண்டும்.திருவள்ளூர்,- திருத்தணி திருத்தலங்களில் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்  உள்பட 55 தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

 

சினிமா போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்படும்

Print PDF

தினகரன்           28.12.2013

சினிமா போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்படும்

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி மாதாந்திர கூட்டம் சேர்மன் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. ஆணையர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். 33 கவுன்சிலர்கள் உள்ள போதும் 15 பேர் மட்டும் குறிப்பட்ட நேரத்திற்கு வந்ததால் அறை மணி நேரம் தாமதமாக கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்ய புதிய ஜெனரேட்டர், சாலை, குடிநீர் பம்ப் மோட்டார் வாங்குவது உள்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகள்:

அதிமுக நகரமன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ்: திண்டிவனத்தில் மறைந்த அரசியல் தலைவர்கள் சிலைகள் பல இருந்தபோதும், எம்ஜிஆர் சிலை வைக்கப்பட வில்லை. நகர மையப்பகுதியில் ஆய்வு செய்து நகராட்சி மூலம் திருவுருவ சிலை நிறுவ வேண்டும்.

அதிமுக நகரமன்ற உறுப்பினர் சுதாகர்: திண்டிவனம் நகரில் பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச போஸ்டர்கள், விளம்பர பலகைகள் வைப்பதை நகராட்சி தடை செய்ய வேண்டும். கல்வி நிலையம் அருகே உள்ள மதுபான கடைகளை மூடவேண்டும்.

சமீபகாலமாக வாகன திருட்டு, தொடர் கொள்ளைகள், சமூக விரோத செயல்களால் திண்டிவனம் நகர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸ் நியமிக்க வேண்டும்.

அதிமுக நகரமன்ற உறுப்பினர் பாலசந்திரன்: காவிரி நதிநீர், டெல்டா விவசாயிகள் பிரச்னை மற்றும் மின் பற்றாக்குறைகளை பற்றி பேசுவதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு 10 நிமிடம் மட்டும் கொடுத்த மத்திய காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பாமக நகரமன்ற உறுப்பினர் ஜெயராஜ்: திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் எங்கு அமையும்.

சேர்மன் வெங்கடேசன்: வக்ப் போர்டு இடத்தில் நகராட்சி மூலம் மீண்டும் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

ஆபாசம் மற்றும் அங்கங்கே சினிமா போஸ்டர்கள் ஒட்டுவது, திருமண மண்டபங்களில் இருந்து இலை, குப்பைகளை தெருவில் கொட்ட தடைவித்து நோட்டீஸ் அனுப்பப்படும்.

2013 புதுவருடத்தில் நகரை தூய்மைப்படுத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கு புது வருட வாழ்த்துகள். 

 

தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

Print PDF
தினமணி             28.12.2013

தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டு அவைகளுக்கு கருத்தடை செய்ய கொண்டு செல்லப்பட்டது.

பெருகிவரும் தெருநாய்கள் தொல்லை தொடர்பான புகாரைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தெருநாய்களை பிடித்து அவைகளுக்கு கருத்தடை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் உள்ள ஹேண்ட்ஸ் பார் அனிமல் சேரிடபிள் அமைப்பின் சார்பாக மருத்துவர்கள் மகேந்திரன், கோபி கிருஷ்ணா, செயலாளர் ரஞ்சித்குமார், உதவியாளர்கள்  பிரான்சிஸ், ரஞ்சித் ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ஆனந்தன் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

9 வார்டுகளில் 63 நாய்கள் பிடிக்கப்பட்டு மீஞ்சூரில் உள்ள நாய்கள் அறுவை சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

இந்த நாய்கள் ஒரு வாரம் கழித்து எங்கு பிடிக்கப்பட்டதோ அங்கு கொண்டு வந்து விடப்படும் என்றும் பிற வார்டுகளிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவைகளுக்கும் இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை நடத்தப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் கோ.மணிவேல் தெரிவித்தார்.
 


Page 41 of 506