Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் பாரபட்சமின்றி ரத்து

Print PDF

தினகரன் 22.06.2010

அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் பாரபட்சமின்றி ரத்து

நெல்லை, ஜூன் 22: அனுமதி பெறாத குடிநீர் இணைப்பு களை பாரபட்சமின்றி ரத்து செய்ய வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் சுப்பிரமணி யன் தலைமையில் நடந்தது. துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பை யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் விஸ்வநாத பாண்டி யன், சுப.சீதாராமன், மைதீன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

தியாகராஜன்: செம் மொழி மாநாடு சிறக்க மார்க்சிஸ்ட் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள் கிறோம். பொறியியல், மருத்துவம் ஆகியவற்றை தமிழில் படிக்க இம்மாநாடு வழி கோல வேண்டும்.

சைபுன்னிசா: எங்களது 37வது வார்டில் வருடத்திற்கு 180 நாட்கள் மட்டுமே தண்ணீர் வருகிறது. மைலக்காதர் தெருவில் தண்ணீர் பிரச்னை காரணமாக பெண்கள் மறியல் நடத்தியுள்ளனர். எனவே அதிகாரி கள் தலையிட்டு குடிநீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.

அப்துல்வகாப்: மினி குடிநீர்த் தொட்டிகள், அடிபம்புகள் கோடை காலத்தில் அமைக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு குடி நீர் தொட்டிக்கு ரூ.25 ஆயிரத்திற்கும் குறைவாக மதிப் பீடு தயாரிக்கப்பட்டதால் கான்ட்ராக்டர் யாரும் இப் பணியை எடுக்க முன்வரவில்லை. திட்டமதிப்பீடு தொகை குறைவாக உள்ளது. பேட்டை ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவர் பணியில் தொடர மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டல தலைவர் மைதீன்: மொத்த வருமானத் தில் 49 சதவீதம் மட்டுமே ஊழியர்கள் சம்பளத்திற்கு செலவிட வேண்டும் என்ற விதியால் மாநகராட்சியில் புதிய ஊழியர்கள் நியமனம் இல்லை. இதை தளர்த்தக்கோரி ஏற்கனவே மண் டல தலைவர்கள் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தை அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாநகராட்சியில் மாதம்தோறும் 10 பேர் ஓய்வு பெற்று வருகின்றனர். ஆனால் புதிய ஆட்கள் நிய மனம் இல்லை. புதிய பணியாளர்களை நியமிக்காமல் பணிகள் நடக்க வாய்ப்பில் லை.

துரை: பாளையில் கடந்த 2 தினங்களாக பல பகுதிகளுக்கு தண்ணீர் இல்லை. இது தொடர்பாக மாணவர் கள் கூட போராட்டம் நடத்தியுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரவில் லை என்று கூறி நாம் ஒதுங்கி விட முடியாது. நெல்லை மாநகராட்சியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தெளி வான திட்டங்கள் இல்லை. அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை பாரபட்சமின்றி ரத்து செய்ய வேண் டும். அதற்கு வார்டு வாரி யாக நாம் குழு அமைக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க அதிகாரிகள் முன் வர வேண் டும்.

பேபிகோபால்; வஉசி மைதானத்தில் அமைச்சர் துவங்கி வைத்த நடைப் பாதை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பிரான்சிஸ்: கேடிசி நகரில் 9 சாலைகள் சந்திக் கும் இடத்தில் தினமும் விபத்துகள் நடந்து வருகின் றன. இதை சரி செய்ய மாநகராட்சி சார்பில் அங்கு மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

 

 

குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி 22.06.2010

குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் ஆய்வு

திருச்சி, ஜூன் 21: திருச்சி மாநகரில் ரூ. 169 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பிரதான தண்ணீர் சேகரிக்கும் கிணற்றில் பக்கவாட்டு நீர்வரத்துக் குழாய் பதிக்கும் பணியை மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற உள் கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதி உதவி, மாநில அரசின் மானியத் தொகை, மாநகராட்சியின் பங்களிப்பு ஆகியவற்றைச் சேர்த்து, ரூ. 169 கோடியில் 8 தொகுப்புகளாகப் பிரித்து குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 3 இடங்களில் பிரதான தண்ணீர் சேகரிக்கும் கிணறு, 2 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 88.59 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதான, கிளை குடிநீர் உந்து குழாய், 262.08 கிலோ மீட்டர் தொலைவுக்கு குடிநீர் விநியோகக் குழாய், 446 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏற்கெனவே பதிக்கப்பட்டு பழுதடைந்த குடிநீர்க் குழாய்களை மாற்றியமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதான தண்ணீர் சேகரிக்கும் மூன்றாவது கிணற்றில் ஓரடி சுற்றளவு கொண்ட பக்கவாட்டு தண்ணீர் வரத்து குழாய்கள் ஒவ்வொன்றும் 120 அடி ஆழத்துக்கு இரு வரிசைகளாக தலா 11 திசைகளில் பதிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாராந்திர அறிக்கை அளிக்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் முடிக்குமாறும் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர்.

அப்போது நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகமது, உதவி நிர்வாகப் பொறியாளர் என். பாலகுருநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ஓசூர் புது பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப்பணி: அரசு செயலர் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 22.06.2010

ஓசூர் புது பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப்பணி: அரசு செயலர் திடீர் ஆய்வு

ஓசூர்: ஓசூரில், புதுபஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணியை இன்று(ஜூன் 22) ஆய்வு செய்ய வருவதாக இருந்த தமிழக உள்ளாட்சி துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டி, யாருக்கும் தெரியாமல் நேற்று இரவோடு இரவாக வந்து ஆய்வு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நகரமான ஓசூரில் பெங்களூரு நான்கு வழிச்சாலையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹைடெக் மாடலில் புதுபஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணி முடிந்த நிலையில் பஸ்ஸ்டாண்ட்டை திறக்க தேதி தருமாறு நகராட்சி நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இதையடுத்து, தமிழக உள்ளாட்சி துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டி இன்று(ஜூன்22ம்தேதி) வந்து பஸ்ஸ்டாண்ட் பணிகளை ஆய்வு செய்து பஸ்ஸ்டாண்ட் திறப்பு விழா குறித்து தேதி அறிவிப்பதாக இருந்தது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மூலம் அனைத்து கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நேற்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சி துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டி, குடிநீர் வடிகால்துறை சேர்மன் ககன்தீப் சிங் பேடி, தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், நேற்று இரவு 9.30 மணிக்கே ஓசூர் வந்தனர். உடனே, அவர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் பஸ்ஸ்டாண்ட் பணிகளை இரவே ஆய்வு செய்ய தனியாக சென்றனர்.

தகவல் அறிந்த நகராட்சி கமிஷனர் பன்னீர் செல்வம், நகராட்சி தலைவர் சத்யா, துணை தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் உடனே பஸ்ஸ்டாண்ட் வந்தனர். பஸ்ஸ்டாண்ட்டை முழுவதுமாக சுற்றிபார்த்த நிரஞ்சன்மார்ட்டி, பஸ்ஸ்டாண்ட் குறுகலாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ்ஸ்டாண்ட்டை விரிவுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ""பஸ்ஸ்டாண்ட்டின் இறுதிகட்ட வடிவமைப்பு பணிகள் முடிய இன்னும் பத்து நாள் தேவைப்படுகிறது. தற்போது வரை முடிந்த பணிகளை ஆய்வு செய்தில் பணிகள் தரமாகவும், திருப்திகரமாகவும் உள்ளது. பஸ்ஸ்டாண்ட் திறப்பு விழா தேதி குறித்து முதல்வர், துணை முதல்வரிடம் ஆலோசித்து பின் அறிவிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பஸ்ஸ்டாண்ட் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், '' என்றார்.

பஸ்ஸ்டாண்ட் பணியை யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் இரவோடு இரவாக உள்ளாட்சி துறை செயலர் ஆய்வு செய்தால், நகராட்சி அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

 


Page 402 of 506