Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லையில் இனிப்புக் கடை கிட்டங்கிக்கு சீல்

Print PDF

தினமணி 18.06.2010

நெல்லையில் இனிப்புக் கடை கிட்டங்கிக்கு சீல்

திருநெல்வேலி,ஜூன் 17: திருநெல்வேலியில் மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியதாக இனிப்புக் கடை கிட்டங்கிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பிரபல இனிப்புக் கடைக்கு சொந்தமான கிட்டங்கி, கைலாசபுரம் நடுத் தெருவில் உள்ளது. இந்தக் கிட்டங்கி மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதாக அப் பகுதி மக்கள், மாநகராட்சியில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சுகாதாரத் துறையினர், அந்த கிட்டங்கியில் திடீர் சோதனை செய்தனர்.

இச் சோதனையில் அந்த கிட்டங்கி மிகவும் சுகாதார கேட்டுடன் செயல்படுவதும், அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கிட்டங்கி உரிமையாளர் கமாலுதீனுக்கு, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறும் கமாலுதீனுக்கு 3 முறை அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், 3 முறையும் கமாலுதீன் ஆஜராகவில்லை. அந்த கிட்டங்கியும் சீரமைக்கப்படவில்லையாம். இந்நிலையில், தச்சநல்லூர் உதவி ஆணையர் சுல்தானா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், அந்த கிட்டங்கிக்கு சீல்வைத்தனர்.

 

பாளை., கே.டி.சி.நகரில் குடிநீர் இணைப்பு முறைப்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Print PDF

தினமலர் 18.06.2010

பாளை., கே.டி.சி.நகரில் குடிநீர் இணைப்பு முறைப்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

திருநெல்வேலி : பாளை., கே.டி.சி.நகரில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புக்களை அபராதம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புக்களில் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தவர்களுக்கு அபராதத் தொகை விதித்து அந்த குடிநீர் இணைப்புக்களை முறைப்படுத்த அரசு உத்தரவிட்டது. வீடுகளுக்கான குடிநீர் இணைப்புக்களை முறைப்படுத்த ரூ.10 ஆயிரம் அபராத தொகையும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரமும் அபராதமாக வசூலிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பாளை., கே.டி.சி.நகரில் 100க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்கள் முறைகேடாக எடுக்கப்பட்டு, துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு அபராத தொகையை வசூலித்து மீண்டும் இணைப்பு வழங்க நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன்படி கே.டி.சி.நகர், அப்துல்ரகுமான் நகர், ஹவுசிங்போர்டு காலனி, ரகுமத்நகர், வி.எம்.சத்திரம் பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்கியவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, சாமுவேல் செல்வராஜ், கருப்பசாமி, .ஆர்.., வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 10 குழுக்களாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குடிநீர் இணைப்புக்களை முறைப்படுத்த வீடுகளில் நோட்டீஸ் விநியோகித்தனர். அதில் குடிநீர் டொசிட், பாதாள சாக்கடை கட்டணம், அபராத தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.

கே.டி.சி.நகர் குடிநீர் திட்டத்தில் மட்டும் 126 வீடுகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குடிநீர் இணைப்புக்களை முறைப்படுத்திக் கொள்ளவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் இணைப்புக்களை முறைப்படுத்தாதவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

நெல்லை கமிஷனர் உத்தரவை மீறி செயல்பட்ட பேக்கரிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

Print PDF

தினமலர் 18.06.2010

நெல்லை கமிஷனர் உத்தரவை மீறி செயல்பட்ட பேக்கரிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

திருநெல்வேலி : நெல்லையில் மாநகராட்சி கமிஷனர் உத்தரவை மீறி செயல்பட்ட பேக்கரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நெல்லை கைலாசபுரத்தில் இனிப்பு மற்றும் கேக் தயாரிப்பு பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியில் சுகாதாரக்குறைபாடு இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர்கள் நாராயணன் நாயர், லெட்சுமிகாந்தன், சுகாதார அதிகாரி டாக்டர் கலுசிவலிங்கம், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து மாநகராட்சி கமிஷனரிடம் அறிக்கை சமர்பித்தனர். அந்த அறிக்கை குறித்து விளக்கம் கோரி நேரில் ஆஜராக பேக்கரி உரிமையாளர் கமாலுதீனுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு நேரில் ஆஜராகததாலும், சுகாதாரக்கேடுகளை சரிசெய்யாததாலும் பேக்கரி தொழில் செய்ய தடை விதித்து கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை மீறி கமாலுதீன், பகல் நேரத்தில் கடையை பூட்டி வைத்தும், இரவு நேரத்தில் கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அதன் அடிப்படையில் தச்சநல்லூர் மண்டல உதவிக்கமிஷனர் சுல்தானா அந்த பேக்கரிக்கு சென்று சீல் வைத்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், ரத்தினகுமார், பாலபபிதா, துப்புரவு மேற்பார்வையாளர் பழனி, சங்கர் சென்றனர்.

 


Page 404 of 506