Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பெங்களூர் மாநகராட்சியில் சென்னை கவுன்சிலர்கள் ஆய்வு

Print PDF

தினகரன் 10.06.2010

பெங்களூர் மாநகராட்சியில் சென்னை கவுன்சிலர்கள் ஆய்வு

பெங்களூர், ஜூன் 10:சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் குழு பெங்களூர் மாநகராட்சி பள்ளி உள்பட பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பெங்களூர் பெருநகர் மாநகராட்சியின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சென்னை மாநகராட்சி தி.மு.கழக கொற டா ஏகப்பன் தலைமையில் தி.மு.., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இடது சாரிகட்சி, விடுதலை சிறுத்தை, பகுஜன்சமாஜ் கட்சியை சேர்ந்த 36 கவுன்சிலர்கள் இரண்டு நாள் பயணமாக பெங்களூர் வந்தனர்.

நேற்று முன்தினம் மேயர் எஸ்.கே.நடராஜ் உள்பட அதிகாரிகளை சந்தித்து மாநகராட்சியின் நிர்வாக செயல்பாடு குறித்து விவரம் பெற்றனர். கவுன்சிலர் குழு நேற்று மாநகராட்சி சார்பில் பராமரித்து வரும் லால்பாக் உள்பட முக்கிய பூங்காளை பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து கஸ்துரிநகரில் இயங்கி வரும் மாநகராட்சி பி.யு. கல்லூரி, மாநகராட்சி பெண்கள் உயர்நிலை பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டனர். பின் மாநகராட்சி மருத்துவமனையின் சேவையை ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து இஸ்கான் கோயில், விவேக்நகரில் உள்ள குழந்தை ஏசு கோயில்க ளை பார்வையிட்டனர். பெங்களூர் வந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு முன்னாள் மேயர் பி.ஆர்.ரமேஷ், கர்நாடக மாநில தி.மு.கழக அமைப்பாளர் ந.இராமசாமி மற்றும் வன்னிய குல ஷத்திரி சங்க தலைவர் நா.மகாலிங்கம் ஆகியோர் உடன் இருந்து ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு நேற்று மாலை விமானம் மூலம் கொல்கத்தா மாநகராட்சியை ஆய்வு செய்ய புறபட்டு சென்றனர்.

 

மாநகராட்சி பணிகளை ஆய்வுசெய்ய சென்னை கவுன்சிலர் குழு பெங்களூர் வருகை

Print PDF

தினகரன் 09.06.2010

மாநகராட்சி பணிகளை ஆய்வுசெய்ய சென்னை கவுன்சிலர் குழு பெங்களூர் வருகை

பெங்களூர், ஜூன் 9: பெங்களூர் மாநகராட்சியின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சென்னையைச் சேர்ந்¢த அனைத்துக் கட்சி கவுன்சிலர் குழு நேற்று பெங்களூர் வந்தது.

சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர்கள் 36 பேர் திமுக கொறடா ஏகப்பன் தலைமையில் நேற்று காலை விமானத்தில் பெங்களூர் வந்தனர். அவர்களுடன் உதவி செயற் பொறியாளர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி கண்காணிப்பாளர் லட்சுமணசாமி ஆகியோரும் வந்திருந்தனர். தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் மதியம் பெங்களூர் மாநகராட்சி தலைமை அலுவலகம் வந்தனர்.

மேயர் நடராஜ், துணை மேயர் தயானந்த், முன்னாள் மேயர் ரமேஷ் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து கவுன்சிலர்களை வரவேற்றனர். அதன்பிறகு மாநகராட்சி கூட்டம் நடைபெறும் இடத்திற்கு மேயர் நடராஜ் சென்னை கவுன்சிலர்களை அழைத்துச் சென்றார்.

அங்கு கவுன்சிலர்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்ட சென்னை கவுன்சிலர்கள் மேயர் மற்றும் துணை மேயரிடம் பெங்களூர் மாநகராட்சியின் செயல்பாடுகள், சட்ட திட்டங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி பதில் பெற்று அதை குறித்து வைத்துக் கொண்டனர். சில கேள்விகளுக்கு மேயர், துணை மேயர் பதிலளிக்க முடியாமல் அதிகாரிகளின் துணை கொண்டு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேயர் நடராஜ் இதுகுறித்து நிருபர்களிடம் கூறும்போது "இதுபோன்ற சந்திப்புகள் இருமாநிலங்களுக்கு இடையேயான நட்புறவை வளர்க்கும். பெங்களூர் மாநகராட்சியில் நிலைக்குழு அமைக்கப்பட்ட பிறகு நமது கவுன்சிலர்கள் குழுவையும் சென்னை அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.

கவுன்சிலர்களுக்கு தலைமையேற்று வந்துள்ள ஏகப்பன், எதிர்க்கட்சித் தலைவர் மங்களராஜ் (காங்.) கூறியதாவது: 8ம்தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூர் வந்துள்ளோம். 9ம்தேதி இரவு இங்கிருந்து புறப்பட்டு கொல் கத்தா மாநகராட்சியை ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பிறகு டெல்லி, சண்டீகர், புனே மாநகராட்சி செயல்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு 18ம்தேதி சென்னை திரும்ப உள்ளோம். பெங்களூர் மாநகராட்சி மேயர் எங்களுக்கு சிறப்பான வரவேற்பை அளித்தது மகிழ்ச்சி தருகிறது.

பெங்களூரில் பல விஷயங்கள் வெகுவாக கவர்ந்துள்ளன. நகரம் சுத்தமாக உள்ளது, சுவர்களில் விளம்பரங்கள், சுவரொட்டிகளை பார்க்கமுடியவில்லை. பூங்காக்கள் அருமையாக பராமரிக்கப்படுகின்றன. இதேபோன்று சென்னையிலும் சுவர் விளம்பரங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். 9ம்தேதி காலை முதல் மாலை வரை பெங்களூரை சுற்றிப் பார்க்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர். இக்குழுவில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேமுதிக ஆகிய கட்சி கவுன்சிலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ.100 அபராதம் வசூல் குரோம்பேட்டையில் அதிரடி

Print PDF

தினகரன் 09.06.2010

பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ.100 அபராதம் வசூல் குரோம்பேட்டையில் அதிரடி

தாம்பரம், ஜூன் 9: குரோம்பேட்டை, பல்லாவரத்தில் பொது இடத்தில் புகை பிடித்தவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சுகாதார ஆயவாளர்கள் மூர்த்தி, பாலாஜி சிங் மற்றும் பல்லாவரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சிவக்குமார், மாரிமுத்து ஆகியோர் நேற்று குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் உள்ள கடைகள், பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பிடிக்க திடீர் சோதனை நடத்தினர்.

குரோம்பேட்டை முதல் பல்லாவரம் வரை ஜிஎஸ்டி சாலையிலும், குரோம்பேட்டை சிஎல்சி லேன், பல்லாவரம் ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளிலும் பொது இடங்களில் புகை பிடித்த 6 பேரிடம் தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது. புகை பிடித்துக் கொண்டிருந்த சிலர், அதிகாரிகளை பார்த்ததும் சிகரெட்டை கீழே போட்டுவிட்டு ஓடினர்.

மேலும், ‘புகை பிடிக்க தடைஎன்ற வாசகம் எழுதிய அட்டைகளை வைக்காத கடைகள், பள்ளிகளுக்கு அருகே சிகரெட் விற்ற கடைகள் என 33 கடைகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. எச்சரிக்கை படங்கள் அச்சிடப்படாத சிகரெட் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பள்ளி அருகே சிகரெட் விற்றால், கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 


Page 409 of 506