Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பதுக்கி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 07.06.2010

பதுக்கி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

போடி, ஜூன், 6: போடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவை விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் கண்காணித்து கடைகளில் விற்பனை செய்தால், பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந் நிலையில், சிலர் இவற்றை வீடுகளில் பதுக்கி வைத்து, தேவைப்படும்போது கடைகளுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்தும், பயன்படுத்தியும் வந்தனர். இதுகுறித்து நகராட்சி சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இதில் குலாலர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன், தியாகராஜன் ஆகியோர் அவற்றைப் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.40 ஆயிரம். இதுகுறித்து ஆணையர் தெரிவித்தபோது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது எச்சரிக்கை விடப்பட்டு பொருள்களை மட்டும் பறிமுதல் செய்கிறோம். இனி இவற்றை விற்பவர்கள மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என்றார்.

 

சுகாதாரமற்ற பொருட்கள் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை நகராட்சி அதிகாரி எச்சரிக்கை

Print PDF

தினகரன் 04.06.2010

சுகாதாரமற்ற பொருட்கள் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை நகராட்சி அதிகாரி எச்சரிக்கை

புதுக்கோட்டை, ஜூன் 4: சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் பொருட்கள் கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சி நகர் நல அலுவலர் ராம்கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுகாதாரமற்ற குடிநீர், பழ ஜூஸ் மற்றும் உணவு பண்டங்களை வாங்கி சாப்பிடுவதால் காலரா, வயிற்று போக்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. திறந்தவெளியில் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது. குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

உணவக உரிமையாளர்கள் எல்லாரும் ஜூஸ், குளிர்பானம் தயாரிக்க சுத்தமான, சுகாதாரமான குடிநீரை பயன்படுத்த வேண்டும். சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் பொருட்களை கண்டறிந்தால் அவை கைப்பற்றி அழிக்கப்படும். கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

தரமற்ற பணிகளுக்கு அபராதம் மாநகராட்சி அதிரடி

Print PDF

தினகரன் 04.06.2010

தரமற்ற பணிகளுக்கு அபராதம் மாநகராட்சி அதிரடி

கோவை, ஜூன் 4:கோவை மாநகரில் தரமில்லாத நடைபாதை, பூங்கா, ரோடு பணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு மாநகரில் ரோடு, நடைபாதை, பூங்கா, மின் விளக்கு, பஸ் ஸ்டாப் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை பொறியாளர்கள், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் அடிக்கடி பார்வையிட்டு வருகின்றனர். ரேஸ்கோர்சில் 2.5 கோடி ரூபாய் செலவில் நடைபயிற்சி தளம், பூங்கா, மின் விளக்கு சீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் அன்சுல்மிஸ்ரா 10ம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.

பூங்காவில் அழகான மலர் செடிகளை நடவேண்டும். புல்வெளி, பூங்கா, மின் விளக்குகளை முறையாக பராமரிக்குமாறு தெரிவித்தார். இதேபோல், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் பணிகளை ஆய்வு செய்த அவர் ஒரு வாரத்தில் பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடிக்கவேண்டும். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்தார்.

சிங்காநல்லூர், ராமநாதபுரம் பகுதியில் செம்மொழி மாநாட்டிற்காக ரோடு, நடைபாதை, பூங்கா பணிகள் நடக்கிறது. இந்த பணியில் தரமில்லை என அதிருப்தி தெரிவித்தார். ரோட்டை தோண்டி பார்த்த போது, தார் கலவை சரியான விகிதத்தில் கலக்கவில்லை, மேலும் சில இடங்களில் ரோடு முழுமை பெறாமல், கணக்கு காட்டப்பட்டதாக தெரிகிறது.

அதிருப்தியடைந்த கமிஷனர், ரோடு பணி செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். ரோடு நல்ல முறையில் அமைத்தால் தான் பில் தொகை வழங்கப்படும் என எச்சரித்தார். கிழக்கு மண்டல பகுதியில் நடைபாதை, பூங்கா பணிகளை சரியாக செய்யாத 5 ஒப்பந்த நிறுவனங்களுக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டது.

 


Page 412 of 506