Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மின்மோட்டார் பொருத்தி குடிநீரை திருடினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 28.06.2010

மின்மோட்டார் பொருத்தி குடிநீரை திருடினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

வத்திராயிருப்பு, மே 28: வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதியில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வத்திராயிருப்பு தேர்வுநிலை பேரூராட்சியில் 1450 குடியிருப்பு இணைப்புகள் உள்ளன. குடிநீர் இணைப்புகளில் சிலர் சட்டவிரோதமாக மின்மோட்டர் பொருத்தி குடிநீரை திருடுவதாக புகார் வந்துள்ளது. இதனால் மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே மின்மோட்டாரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் முன்னறிவிப்பின்றி பறிமுதல் செய்யப்படும். மேலும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

குமரியில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் கட்டுவோர் மீது நடவடிக்கை: ஆட்சியர்

Print PDF

தினகரன் 28.06.2010

குமரியில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் கட்டுவோர் மீது நடவடிக்கை: ஆட்சியர்

நாகர்கோவில், மே 27: கன்னியாகுமரியில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் கட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆட்சியரைத் தலைவராகவும், வன அலுவலர், மீன்வள உதவி இயக்குநர், நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர், மாவட்ட தொழில் மைய மேலாளர், ஊரமைப்புத் துறை துணை இயக்குநர், மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி செயற்பொறியாளர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை மேலாண்மைக் குழு செயல்பட்டு வருகிறது.

இக் குழு கடற்கரை ஒழுங்குமுறை விதிகள் 1991-ஐ செயல்படுத்தி வருகிறது. கடல் மேல்மட்ட அலையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் எவ்விதக் கட்டடம், அபிவிருத்தி பணிகளுக்கு உரிய ஒப்புதல் பெற வேண்டும். கன்னியாகுமரி பேரூராட்சியில் இக் குழுவின் அனுமதியின்றி கட்டடம் கட்டுவது தொடர்பாக புகார் மனுக்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடற்கரை மேலாண்மைக் குழுவின் 43-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி அதிகாரிகள் குழுவினர் கன்னியாகுமரி சன்னதி தெரு, கோவளம் சாலை, சர்ச் தெருக்களில் கட்டப்பட்டு வரும் 12 இடங்களில் ஆய்வு நடத்தியது.

ஆய்வின்போது பெறப்பட்ட அனுமதிக்கு அதிகமாக தளங்கள் கட்டுவதும், முன்அனுமதியின்றி கட்டடங்கள் கட்டுவதும் அறியப்பட்டன. அவ்வாறு கட்டடங்கள் கட்டக் கூடாது என்றும், கட்டடப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் நகராட்சிகள் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் கடற்கரை ஒழுங்கு பிராந்தியத்துக்குள் வரும் அனைத்துக் கட்டடங்களும், மாவட்ட கடற்கரை மேலாண்மைக் குழு மற்றும் பேரூராட்சியிடம் அனுமதி பெற்ற பின்னரே கட்டப்பட வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

 

 

குன்னூர் நகரில் நகராட்சி கடைக்காரர்கள் புதுப்பிக்க வாய்ப்பு

Print PDF

தினகரன்   27.05.2010

குன்னூர் நகரில் நகராட்சி கடைக்காரர்கள் புதுப்பிக்க வாய்ப்பு

குன்னூர், மே 27: குன்னூர் மார்க்கெட் பகுதியில் 900க் கும் மேல் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. பல ஆண்டுகளாக இங்குள்ள கடை உரிமைதாரர்கள் லைசன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை. தற்போது நிரந்தரமாக 250 கடைகள் மட்டுமே உரிமைதாரர்கள் வசம் உள்ளது. மீதமுள்ள வை அவர்களின் வாரிசுதாரர்கள், பினாமிகள் பெய ரில் மட்டுமே செயல்படுகிறது.

கடை உரிமைதாரர்கள் மட்டுமின்றி அவர்களது வாரிசுகள் மற்றும் குத்தகைக்கு எடுத்து கடை நடத்துபவர்களுக்கு உரிமத்தை புதுப்பித்து கொடுக்க வேண்டும் என்று குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ரகீம் உள்ளிட்டோர் தமிழக அரசை வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள் ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பேரில் தற்போது இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன்படி நகராட்சியில் கடைகள் நடத்தி வரும் அசல், வாரிசு மற்றும் அனு போக தாரர்களுக்கு உரிமத் தை புதுப்பித்து பெயர் மாற்றம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டது. கடந்த 1.7.2007 வரை யிலான முதல் மூன்றாண்டு காலத்திற்கு தினசரி வாட கையில் கடைக்கு 15 சதவீத உயர்வுடன் உரிமம் புதுப்பிக்கப்பட்டு அசல் உரிமதாரர்களாக பெயர் மாற்றம் செய்யப்படும்.

இந்த கால கட்டத்தில் 3 ஆண்டு கால நிறைவு பெறு வதை தொடர்ந்து ஏற்கன வே பெயர் மாற்றம் செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு வரும் 9 ஆண்டுகள் வரை நகராட்சியால் குத்தகைக்கு விட அனுமதிக்கப்பட்டுள் ளது. ஆனால் மூன்று ஆண் டுக்கு ஒரு முறை குத்தகை தொகையில் 15 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்படி உயர்த்தப்பட உள்ளது.

இதில் நூறு சதுர அடிக் குள் உள்ள கடை வியாபாரிகள் ரூ.500ம், 100 முதல் 500 சதுர அடி உள்ளவர் கள் ஆயிரம், 500 முதல் 1000 சதுர அடி உள்ளவர்கள் ரூ. 1500, ஆயிரம் சதுர அடிக்கு மேல் ரூ.2000 வரை கட்டணம் செலுத்த வேண் டும்.

இது வரும் 1.7.2010 முதல் அமல்படுத்தப்படும். எனவே இதற்கான புதுப்பிப்பு கட்டணங்களை வியாபாரிகள் உடனடியாக செலுத்த வேண்டும். நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 135 ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதில் அரசு சார்பில் 12 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வீடு மட்டும் தீ விபத்து ஏற்பட்டு எரிந்தது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலை, வருவாய் துறை, நகராட்சியால் அகற்றப்பட்டு இருப்பதால் நகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏதும் இல்லை. எனவே, ஆக்கிரமிப்பு கட்டண வசூலிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 


Page 418 of 506