தினமலர் 06.05.2010
பன்றி வளர்ப்போருக்கு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
கடலூர் : கடலூர் நகரில் பன்றி வளர்ப்போர்கள் வரும் 9ம் தேதிக்குள் தாங்களாகவே பன்றிகளை நகரை விட்டு அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நகராட்சி பகுதியில் பொது சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் சுற்றித் திரியும் பன்றிகளை, அதனை வளர்ப்பவர்களே நகரை விட்டு அகற்றிக் கொள்ள வேண்டும் என நகராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நகரில் பல இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனை வரும் 9ம் தேதிக் குள் அவர்களாகவே அப்புறப்படுத்த வேண் டும். இல்லையெனில் வரும் 10ம் தேதி நகராட்சி சார்பில் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, அதனை வளர்ப் போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.